Menu

Search This Blog

Ithu Valiba Sothanaiya - Deepa Babu

 



இது வாலிப சோதனையா...

கதைக்கரு


“சின்ன சின்ன பூவே” நாவல் முடிச்சதுல இருந்து ரமணன், நந்தினி மகன் மதுநந்தனை நாயகனா போட்டு ஒரு ஜாலியான நாவல் எழுதுங்களேன் என்று என் அபிமான வாசகி ஒருவர் நாலைந்து வருடங்களா கேட்டுட்டு இருந்தாங்க. எனக்கு இதை எழுத நேரம் அமையாம வரிசையா வெவ்வேறு கதைக்களம் எடுத்து அதுல பிஸி ஆகிட்டேன்.

மொத்தமா இருபது நாவல் முடிச்சிட்டு, இருபத்து ஒன்றாவது நாவலாக தான் இதை எழுத முடிந்தது. மதுவை ரொம்பவே ஜாலியான சுட்டிப் பையனா தான் அந்தக் கதையில காட்டி இருப்பேன். ஸோ... இதைப் பக்காவாக மதுவின் குறும்புத்தனங்கள் நிறைந்த ஒரு இலகுவான காதல் கதையா தான் எழுதி இருக்கேன்.

அடுத்து நம்ம நாயகி பக்கம் வந்தா... இவள் வேற யாரும் இல்லைங்க, மதுவை போல என்னுடைய மற்றொரு நாவல் குடும்பத்தில் இருந்து தான் தேர்வு செஞ்சு ஜோடி போட்டு இருக்கேன். அம்மணி யாருன்னா... “உனக்காகவே நான் வாழ்கிறேன்” நாவல் கவின்வாணன், சிவணி தம்பதி தவமிருந்து பெற்ற ஒற்றை மகளான இன்மதி தான்.

ஸோ... இரண்டு நாவல்களின் கதைமாந்தர்களையும் அழகாக ஒன்றிணைத்து, ஒரு கலகலப்பான கதையை கொடுத்து இருக்கிறேன், வாசித்து மகிழுங்கள்.

Ithu Valiba Sothanaiya - Kindle Link

**********

கதையிலிருந்து சிறு துளிகள்


முகமெங்கும் புன்னகையில் மலர்ந்துப் பளபளக்க, விழிகள் மின்ன பேசுபவனின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவள், அமைதியாக இருந்தாள்.

“என்ன ஆச்சு? இவ்வளவு ஸைலன்ட்டா இருக்கே...” என்றவாறு மதுநந்தன் நெருங்கி வர, இவளின் இதயம் படபடத்தது.

“ஒன்னுமில்லை... கொஞ்சம் ஷாக். உங்களை எதிர்பார்க்கலை, நெக்ஸ்ட் வீக் வர்றதா கேள்விப் பட்டேன். எப்போ வந்தீங்க?” என பொதுவாய் விசாரித்தாள் இன்மதி.

“ம்... இயர்லி மார்னிங் தான். எல்லார்க்கும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்க சொல்லாம, கொள்ளாம முன்னாடி வந்துட்டேன். வந்த உடனே ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழலாம்னு நினைச்சுப் படுத்தேன், நல்லா தூங்கிட்டேன்.

அக்காவும், பசங்களும் பார்க்க வந்துட்டுப் போனதா அம்மா சொன்னாங்க. அது தான் உடனே கிளம்பி அவளை பார்க்க வந்தேன், இங்கே நீ எனக்குப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துட்டே!” என பளீரென்று சிரித்தான்.

அதைத் திருப்ப மனம் வராதவளுக்கு மனஸ்வினி தன்னை அழைத்து விட்டு, விஷயத்தை சொல்லாமல் விழுங்கியதன் மர்மம் புரிந்தது.

“என்ன அவ்வளவு டீப் திங்கிங்? ஏன் நின்னுட்டே இருக்கே? உட்கார்!” என்றபடி அவள் இருக்கைக்கு எதிரே உள்ள நாற்காலியில், மிகவும் சுவாதீனமாக அமர்ந்துக் கொண்டான் மது.

மதிக்கு தான் அவன் அங்கே இருப்பதும், பேசுவதும் சின்ன அதிருப்தியை கொடுத்தது.

“இப்போ கவின் அங்கிளோட வொர்க்ஸ் எல்லாம் நீயும் ஷேர் பண்ணிட்டு இருக்கியா என்ன? இங்கே ஆடிட்டிங் ரூம்ல இருக்கே!”

“ம்... ஆமா... இன்னிக்கு இங்கே வொர்க் இருக்கவும் தான் வந்தேன்!” என்றவாறு சென்று தன் இடத்தில் அமர்ந்தவள், “மனு அக்கா அவங்க ரூம்ல தான் இருக்காங்க. நீங்க அவங்களை போய் பார்க்கலையா?” என்று அவனை நாசூக்காக விரட்ட முயன்றாள்.

“ப்ச்... அக்கா தானே, அவளை கிளம்பும் போது பார்த்துக்கறேன். உன்னை பார்த்து தான் ரொம்ப நாளாச்சு. எப்படியும்... ஒரு நாலைஞ்சு வருஷம் இருக்கும் இல்லை?”

வெறும் தலை அசைவில் பதிலைக் கொடுத்தவள், இவனை எப்படி இங்கிருந்து விரட்டுவது என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

“ஆனா... ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே லட்டு. எவ்வளவு அழகா ச்சப்பியா புசுபுசுன்னு இருந்தே நீ? க்யூட்டி உன்னை லட்டுன்னு கூப்பிடறது அவ்வளவு பொருத்தமா இருக்கும். இப்போ என்னடான்னா இப்படி ஸ்லிம் ப்யூட்டியா ஆகிட்டே... ஓகே, நல்லா தான் இருக்கு. அதுவும் இந்த ஸ்ஸாரில செம கலக்கலா இருக்கே!”

ஆர்வமாக தன்னை வர்ணிப்பவனின் பேச்சில் லேசாய் மூச்சடைக்க, தடுமாற்றம் ஒருபுறம், மெலிதான கோபம் மறுபுறம் என திணறியவள், முயன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அவனிடம் பொறுமையாகப் பேசினாள்.

“மது... இஃப் யூ டோன்ட் மைன்ட். எனக்கு வொர்க் லோட் ஹெவியா இருக்கு, அன்ட் இங்கே முடிச்சிட்டு அப்பா ஆபிஸுக்கு வேறப் போகனும். ஸோ ப்ளீஸ்...” என்று கண்களை சுருக்கினாள் இன்மதி.

“டூ பேட்... எவ்வளவு பாலிஷ்டா என்னை விரட்டறே நீ? உன் கேரீர்ல ரொம்ப பிஸி ஆகிட்டியா பேபி... கமிட்மென்ட்ஸ் அதிகமோ...”

**********


மதி அவனை பல்லை கடித்துப் பார்த்து வைக்க, “என்ன லுக்கு? அட ச்சீய்... போய் கிளம்பி வா!” என்று பெண்ணிற்கு அசட்டையாக கட்டளையிட்டான் மது.

பக்கென்று சிரித்த திலகா, “அப்படி போடுடா அவளை... வர வர ரொம்பத் தான் ஆட்டிட்டியூட் காட்டுறா!” என்று குதூகலமாக மதுவின் கையில் தட்டினார்.

“பாட்டி...” என்றவள் அதட்ட, அனைவரின் முகத்திலும் நகை அரும்பியது.

“சத்தம் எல்லாம் ரொம்ப பெருசா வருது... உனக்கு அஞ்சே நிமிஷம் தான் டைம், பரபரன்னு கிளம்பி வந்து என் முன்னாடி நிக்கறே!” என்றான் அதிகாரமாக.

பையனிடம் கோபமாக கண்களை உருட்டியவள், “முடியாது!” என்று மறுத்து அடமாக கைகளை குறுக்கே கட்டிக் கொண்டாள்.

சட்டென்று எழுந்தவன் அவளை ஏற இறங்கப் பார்த்து, “அப்போ சரி... போட்டு இருக்க ட்ரஸ்ஸோடவே போயிட்டு வரலாம் வா, இதுவே நல்லாத் தான் இருக்கு!” என்று அவள் கரம் பற்றி எழுப்பினான்.

“மை காட்... மது, எனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடுங்களேன்!”

உச்சக்கட்ட எரிச்சலில் முகம் சுளிப்பவளை நிதானமாகப் பார்த்தவன், “அப்படி எல்லாம் விட முடியாது லட்டு, வா போகலாம்!” என்றான் தன் பிடிவாதமாக.

“அப்பா...” என சலிப்புடன் தன்னிடம் திரும்பிய மகளை யோசனையுடன் அளவெடுத்த கவின்,

“ஒரு சின்ன ரிலாக்ஸ் ட்ரிப்பா போயிட்டுத் தான் வாயேன்டா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்து மது கூப்பிடறான் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

மீதம் இருக்கும் வீட்டினரின் பார்வையும் அதையே எதிரொலிக்க, வேறு வழியின்றி கடுப்புடன் எழுந்தவள், நாயகனை அழுத்தமாக முறைத்து விட்டு தனது அறைக்குச் சென்றாள்.

**********


பின் சீட்டில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தவளை விழிகளால் அளந்தவன், அக்கா மகனிடம் பேச்சுக் கொடுத்தான்.

“சின்னு... உன் புக்ஸ்ல உர்ரான்கோட்டான் போட்டோ எதுவும் பார்த்து இருக்கியா நீ?”

“ஓ... பார்த்து இருக்கேனே மாமா!”

“வாவ்... சூப்பர்... நேர்ல?”

“ப்ச்... இல்லை மாமா, ஜூல கூட பார்க்கலை!” என்று சோகமாக குட்டி இதழ்களை பிதுக்கினான்.

“அதுக்கு ஏன்டா சின்னு நீ இவ்வளவு கவலைப்படறே? அப்படியே நம்ம காருக்கு உள்ளேயே பின்னாடி திரும்பிப் பாரு, எவ்வளவு பெரிய உர்ரான்கோட்டான் உட்கார்ந்து இருக்குன்னு!”

தன்னை வைத்து குழந்தையிடம் கேலிப் பேசுபவனை ஒன்றும் சொல்ல முடியாமல், அவள் மேலும் கடுப்புடன் அமர்ந்து இருக்க, மதுவின் உதடுகளில் சீண்டல் புன்னகை துளிர்த்தது.

“யாரை... நம்ம லட்டுக்காவையா சொல்றீங்க?”

வியப்புடன் கேட்கும் சிறுவனிடம் கண்ணடித்து, “அவளையே தான் சொல்றேன்!” என்றவனின் இதழ்கள் மேலும் நகைப்பில் விரிந்தது.

மதி கை முஷ்டிகளை இறுக்க, “அட போங்க மாமா... அக்கா எவ்வளவு அழகா இருக்காங்க? அவங்களை போய் அப்படிச் சொல்றீங்க. நானாவது உர்ரான்கோட்டானை போட்டோல பார்த்து இருக்கேன், நீங்க அது கூட பார்க்கலை போல் இருக்கு!” என பெரிதாய் சலித்துக் கொண்டான்.

அதைக் கேட்டு பக்கென்று சிரிப்பை சிதற விட்டவளோ, வேகமாக கதவின் ஜன்னலில் கையூன்றி முகத்தை தாங்கி வெளிப்புறம் திரும்பிக் கொண்டாள்.

“டேய்... என்னடா பொசுக்குன்னு இப்படி மாமாவை இன்ஸல்ட் பண்ணிட்டே?” என்று பொங்கினான் மது.

அவனை அலட்சியமாய் பார்த்தவனோ, “ம்... நான் என்ன பண்ணேன்? நீங்க தப்பா சொல்றதை சரியா தப்புன்னு மட்டும் தானே சொன்னேன். உர்ரான்கோட்டான் பத்தி எனக்கு நிறைய டீட்டைல்ஸ் தெரியும். குட்டிம்மாட்ட கேட்டு, கூகுள்ல தேடிப் பார்த்தோம்!” என்று மேலும் விளக்கம் சொல்ல முயன்ற மருமகனை பாய்ந்து தடுத்தான் நாயகன்.

“அடேய் போதும்டா என்னை டேமேஜ் பண்ணது... நீ வெறும் எல்.கே.ஜி. தானே படிக்கறே? அப்படி நம்பித் தானேடா கொஞ்சம் சீனோட்ட பார்த்தேன். நீ என்னடா ஒத்தை வார்த்தையை வைச்சு இவ்வளவு பேசறே? இதெல்லாம் எப்படிடா தெரியும் உனக்கு?” என்று திகைப்பாய் கேட்டான்.

“ஆங்... எனக்கு அனிமல்ஸ் பத்தி தெரிஞ்சுக்கறது ரொம்ப பிடிக்கும்னு, குட்டிம்மாட்ட கேட்டு எல்லாம் தேடி எடுத்து சொல்லித் தரச் சொல்வேன்!”

அசட்டையாய் மொழிபவனை பல்லைக் கடித்துப் பார்த்தவன், “அப்போ உன் குட்டிம்மாவும் இதுல எக்ஸ்பர்ட்டா?” என்றான் கடுப்பாக.

“ஆமா... ஆமா...” என்று சிறுவன் துள்ளலுடன் சொல்ல,

“நல்லா சேர்ந்தீங்கடா கூட்டு!”

ஒற்றைக் கையில் காரை ஓட்டியபடி தலையில் அடித்துக் கொண்டவனை பார்த்து கண்களை இடுக்கியவன், “உங்களுக்கு ஏன் இவ்வளவு காண்டாகுது? என் பிரெண்ட் ஸ்னேக் ஓட போட்டோவை பார்த்தே அது பாய்ஸ்னஸா ஆர் நான்- பாய்ஸ்னஸான்னு சொல்வான் தெரியுமா?” என்றான் அலட்டலாக.

(இது உண்மை... என் உறவினர் வட்டத்தில் உள்ள எல்.கே.ஜி. குழந்தை ஒருவன், விஷமுள்ள பாம்பு, இல்லாத பாம்புன்னு புகைப்படம் பார்த்தே தெளிவா சொல்றான்.)

அதில் அதிர்ச்சியாகி விழிகளை விரித்தவன், “இது வேறயாடா... நீங்க எல்லாம் வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோஸ்டா!” என்று வேகமாய் தலை அசைத்துக் கொண்டான்.

“நோ... வி டூகே கிட்ஸ் ஆர் வெரி ஸ்மார்ட் யூ க்னோ?” என்று பெருமையாக தோள்களை குலுக்கிக் கொண்டான் அஸ்வந்த்.

“டேய் சில்வண்டு... நீ டூகே கிட் இல்லைடா, டூதௌசன்ட் டென்ல கூட வர மாட்டே!” என்று நக்கலாய் மொழிந்தான் மது.

சட்டென்று குழம்பி விழித்தப் பையன், “ம்... அப்போ நான் எதுல மாமா வருவேன்?” என்று வேகமாக விசாரித்தான்.

“ஹான்... இவ்வளவு வாய் அடிக்கறே இல்லை, போய் உன் குட்டிம்மாட்ட கேட்டே அதையும் தெரிஞ்சிக்கோ!”

அலட்சியமாய் உதடுகளை சுழித்து கேலிச் செய்யும் மாமனை, கண்களை உருட்டி சின்னக் கண்ணன் முறைக்க, சற்று முன்பு இருந்த இறுக்கம் தொலைத்து மிகவும் இலகுவாக அவர்களின் பேச்சுக்களை ரசித்து இருந்தாள் இன்மதி.

**********


விழிகளில் கடுமைப் பரவ பேசும் மகளை சிந்தனையுடன் பார்த்து, “ஏன் பாப்பா... நம்ம மதுவுக்கு என்ன? ரொம்ப நல்லப் பையன், பேமிலியும் நமக்கு நல்லா பழக்கமானவங்க, உனக்கு...” என்ற சிவணியை வேகமாக இடைமறித்தாள் அவள்.

“அம்மா போதும்... என்ன நல்லப் பையன்? வெறும் நல்லப் பையன் மட்டும் போதுமா... ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்க...” என்று கடுப்புடன் கேட்டாள்.

‘வேற என்ன வேணும்?’ என்று பெற்றவர் விழிக்க,

“வேற என்ன வேணும்னு நீ எதிர்பார்க்குறே?” என பட்டென்று கேட்டு இருந்தார் திலகா.

“ப்ச் பாட்டி... அது எல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது!”

“ஏன் சொல்லேன்? உங்க யூத்தோட டேஸ்ட் என்னென்னு நானும் தான் தெரிஞ்சிக்கறேன்!”

தன்னை மீறி மாமியாரின் நையாண்டியில் சிவணியின் இதழ்கள் சட்டென்று சிரிப்பை சிந்திவிட, வீட்டின் வாரிசோ மூத்தப் பெண்கள் இருவரையும் ஒரு சேர முறைத்தாள்.

“இல்லை... உன்னோட டேஸ்ட் தெரிஞ்சா அதுக்கு ஏத்த மாதிரி நான் மாப்பிள்ளை பார்ப்பேன் இல்லை...”

“பாட்டி...” என்று அதட்டியபடி வேகமாக எழுந்தவள், “உங்களை யார் எனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னா?” என்றாள் ஆவேசமாக.

“இது என்னடி வம்பா இருக்கு? இருபத்து நாலு வயசுப் பொண்ணுக்கு, வீட்டுல இருக்கப் பெரியவங்க கல்யாணத்துக்கு பார்க்க மாட்டாங்களா?” என்று நாடியில் கை வைத்து அப்பாவியாக கேட்டார்.

“இந்த நடிப்பு எல்லாம் என்கிட்ட வேணாம்!” என அவரிடம் பல்லைக் கடித்தவள் பட்டென்று தந்தையிடம் திரும்பி, “அப்பா... இவங்களை அமைதியா இருக்கச் சொல்லுங்க. எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேணாம். என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விட்டாலே போதும்!” என்று இறுக்கத்துடன் கூறினாள்.

அவசரமாக மகளை நெருங்கி, “சரிம்மா விடு... அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகறே?” என்று அவளின் கையை பிடித்து சமாதானப் படுத்தினார் கவின்.

தனக்குள் மெதுவாக உச்சுக் கொட்டிக் கொண்டவள், “ஆனா நீங்க எதுவும் என்னை தப்பா நினைக்கலை இல்லை அப்பா!” என்று விசனத்துடன் விசாரித்தாள்.

சன்ன முறுவலிப்புடன் அவள் தலையில் கை வைத்து ஆட்டியவர், “நீதான் ஒரே வரியில உனக்குப் பிடிக்காத விஷயத்தை, எங்ககிட்ட ஷேர் பண்ணத் தோணலைன்னு சொல்லிட்டியே. அப்புறம் என்ன? விடு!” என்றார் இலகுவாக.

“தேங்க் யூ ஸோ மச் பா!” என்று அவரை அணைத்து நன்றி கூறியவள், “ஓகே குட்நைட்... நான் தூங்கப் போறேன்!” என்று அறைக்கு கிளம்பினாள்.

“சரிடா லட்டு... குட்நைட்!” என்று திலகா விரைந்து பேத்திக்கு இரவு வணக்கம் சொல்ல, அவளோ திரும்பி அவரை முறைத்துப் பார்த்தாள்.

“நான் உங்களுக்குச் சொல்லலை... என் அப்பாவுக்குச் சொன்னேன்!” என்று நொடித்தபடி, அம்மாவையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றாள்.

“போச்சு... உங்களால அவ என்கிட்ட கோவிச்சிட்டுப் போறா. இன்னும் ரெண்டு நாளைக்கு என்னை திரும்பிப் பார்க்காம, உம்முன்னு முகத்தை தூக்கி வைச்சிக்குவா!” என்று சிவணி தவித்தார்.

“அடப்போடி இவளே... உன் பொண்ணை பத்தி தெரியாது, இல்லை... உன்னை பத்தி தான் தெரியாது. நீ அவ பின்னாடியே பூனைக் குட்டி மாதிரி சுத்தற சுத்தல்ல, அவ தன்னால மலை இறங்கி உன்கிட்ட கொஞ்ச ஆரம்பிச்சிடுவா. எப்பவும் இந்த வீட்டுல நடக்குறது தானே இது!”

மகள் அறைக்குள் சென்று விட்டதை கவனித்தபடி, அம்மாவின் சொற்களையும் காதில் வாங்கியவாறு பெருமூச்சுடன் அமர்ந்தார் கவின்.

**********


பார்வை முழுவதும் ஆர்வம் நிறைந்து இருக்க, தன்னை ஆசையுடன் பார்த்து இருந்து பேசும் விழிகளை கண்டவள், விரைந்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

அவன் கைகளை விலக்கியபடி நகர்ந்தவள், “என்ன உளர்றீங்க?” என்று வேகமாக கோப முகமூடியை அணிந்துக் கொண்டாள்.

“நான் உளறலை... நீதான் உளறிட்டே!”

கண்கள் மின்ன குறுநகையோடு நின்று இருந்தவனை கடுமையாக முறைத்தவள், “என் வார்த்தைகளுக்கு தப்புத் தப்பா புதுசா நீங்க ஒரு அர்த்தம் கொடுத்துக்கிட்டா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது!” என்று ரோஷமாக உரைத்தாள்.

அதற்கு அவன் இலகுவாக, “ஓஹோ...” என்று மட்டும் ஓர் ராகம் போட்டான்.

“ப்ச்...” என முகத்தை சுளித்தவள், “அதை விடுங்க... ஸ்போர்ட்ஸ் எக்யூமென்ட் கம்பெனி வொர்க்ஸை எப்போ ஸ்டார்ட் பண்றீங்க?” என்று அதிகாரமாக கேட்டாள்.

“நீ எப்போ சொல்றியோ, அப்போ உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம் லட்டு!” என்று தோள்களை குலுக்கி, பின்னால் இருந்தச் சுவற்றில் ஒற்றைக் காலை மடக்கி ஊன்றிச் சாய்ந்துக் கொண்டான் மது.

நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், “ஓகே... பாட்டிகிட்ட சொல்லி ஒரு நல்ல நாள் பார்க்கச் சொல்றேன்!” என்றாள் அமைதியாக.

“நல்ல நாள் எதுக்கு லட்டு?”

பலமாக அவனை முறைத்தவள், “வேற எதுக்கு? கம்பெனி ஸ்டார்ட் பண்ணத்தான்!” என்று பற்களை கடித்தாள்.

“ஓகே... ஓகே... அப்படியே அங்கிள்ட்ட சொல்லி, அதுக்குள்ளே உன்னோட வொர்க்ஸை ஃப்ரீ பண்ணிட்டு நீயும் ரெடி ஆகிடு!”

அசால்டாக சொல்பவனின் வார்த்தைகளில் திகைத்தவள், “அது எதுக்கு?” என்றாள் வேகமாக.

“வேற எதுக்கு? நம்ம கம்பெனியை ஸ்டார்ட் பண்ணத்தான்!”

தன் வார்த்தைகளை திருப்பிப் படித்தவனை, “மது...” என்று அழைத்து அயர்வோடு பார்த்தாள் அவள்.

“ஏன் பேபி அதுக்குள்ளே டயர்ட் ஆகிட்டே? இனிமே தானே நமக்கு வேலையே இருக்கு!”

அவளை நெருங்கி வந்து நாடியை உயர்த்தி அவன் கேட்க, “எனக்குப் பிடிக்கலை, வேணாம்!” என்றாள் பெண் கெஞ்சலாக.

பார்வையை கூர்மையாக்கியவன், “எது பிடிக்கலை... என்ன வேணாம்?” என்று அழுத்தமாக கேட்டான்.

**********


அனைவரின் வாயையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த நந்தினி, “நீங்க எல்லாம் என்ன பேசிக்கறீங்க? எனக்கு ஒன்னுமே புரியலை!” என்று வேகமாக இடையில் கேள்வி எழுப்பினார்.

அன்னையை ஒரு பார்வை பார்த்து விட்டு தகப்பனிடம் திரும்பிய மனஸ்வினி, “அப்பா... போச்சு, இன்னிக்கு உங்க குட்டிம்மாகிட்ட உங்களுக்கு ஓவர் டியூட்டி ஆகப் போகுது!” என்று எச்சரித்தாள்.

“ஐ’ம் ஆல்வேஸ் வெயிட்டிங் ஃபார் தட் ஸ்வீட் மொமன்ட் மனும்மா!” என்றவாறு மனைவியை குறும்புடன் பார்த்தார் ரமணன்.

“மை குட்னஸ்... மாமா, மனு அன்னிக்கு உங்களை பத்தி சொன்னப்ப கூட நான் முழுசா நம்பலை. இன்னிக்கு நேர்லயே பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்!” என்று வியந்தான் அஸ்வின்.

“நீங்களா எனக்கு ஒரு உருவகம் கொடுத்துக்கிட்டா, அதுக்கு நான் பொறுப்பு இல்லை மாப்பிள்ளை!” என அட்டகாசமாக நகைத்தார் அவர்.

“ஏய் மனு... அப்பாவும், பொண்ணும் என்ன திருட்டுத்தனம் பண்றீங்க? ஒழுங்கா என்கிட்ட விஷயத்தை சொல்லுங்க!” என்று முறைப்பாக விசாரித்தார் நந்தினி.

“அது ஒன்னும் இல்லைம்மா...” என்ற மகள் நடந்ததை விவரிக்க, மூத்தவர் பார்வையாலே தன் கணவரை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு இருந்தார்.

**********


அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள, “அதுக்குள்ளே இவன் அவளை ஒரு வழி பண்ணப் போறான்!” என்று தலை அசைத்துக் கொண்டான் அஸ்வின்.

“அது என்னவோ நிஜம் தான்... அன்னிக்கு என்னையே செம டென்ஷன் பண்ணிட்டான் மது!” என்று புலம்பினார் கவின்.

என்னவென்று ஆவலாக விசாரித்தவர்களிடம் சோகமாக அவர் விஷயத்தை கூற, அனைவருக்கு உள்ளும் சிரிப்பு வெடித்துக் கிளம்பியது.

“சரியான வாலு இந்தப் பையன்... இன்னமும் அப்படியே தானே இருக்கான்!” என்று முறுவலித்தார் திலகா.

“ஆமா ஆமா... அன்னிக்கே எதுவும் சொல்ல கூடாதுன்னு அவள் மிரட்டிட்டு இருக்கும் போதே, இவன் எதையும் லட்சியம் பண்ணாம எல்லாத்தையும் நம்மகிட்ட கொட்டிட்டானே!”

அறிவும் நகைப்புடன் கூற, கவினின் முகத்தில் தான் பெரும் குழப்பம் நிலவிக் கொண்டு இருந்தது.

“என்னாச்சு? எதுனாலும் நாம ஓப்பனா பேசிக்கலாம், அவங்க எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்!” என்று கேலிச் செய்தார் ரமணன்.

“இல்லை... இதுல அம்முவோட ஸ்டேண்டை என்னால க்ளியரா ஸ்டடி பண்ண முடியலை. மதுவை நினைச்சு அவ்வளவு கோபப்படுறா, அப்செட் ஆகறான்னு தள்ளி வைக்கலாம்னு பார்த்தா, அதுக்கும் ரொம்ப வொர்ஸ்ட்டா ஃபீல் பண்றா? எந்தப் பக்கம் மூவ் பண்றதுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது!”

“ஹஹா... அங்கிள்... இதுக்குப் பேர் தான் லவ். விலகிப் போன்னு அவங்க ஈகோ எடுத்துச் சொல்லி தள்ளி விட்டாலும், அவங்க மனசு அதை முழுசா ஏத்துக்க முடியாம தவிச்சுப் போய், ஒரு ஸ்டேஜ்ல திரும்பவும் தான் விரும்பறவங்களோட சேரப் பார்க்கும்!” என்று புன்னகைத்தாள் மனு.

“அதெல்லாம் என் பையனுக்கு ஒன்னும் புரியாதும்மா... கல்யாணம் பண்ணியும் ஈகோ பார்த்துட்டு பொண்டாட்டிகிட்ட தள்ளி இருந்தவன் இவன்!” என்று நக்கலாகச் சொன்னார் திலகா.

“அச்சோ ஆன்ட்டி... நீங்க என்னை விட பாவம், இவராவது என்னை கல்யாணம் வரைக்கும் தான் டென்ஷன் படுத்தினார். அங்கிள் உங்களை அதுக்கு அப்புறமும் அப்செட் பண்ணாரா?”

“அந்தக் கொடுமையை ஏன்டா கேட்கறே? அதை எல்லாம் கடந்து வந்து இப்போ என் பொண்ணு கல்யாணத்துக்கும் திரும்ப அதையே ஃபேஸ் பண்றேன் நான். அப்படியே அவங்க அப்பாவோட ஈகோவும், பொஸஸிவ்னஸும் அவளுக்கும் மாறாம வந்து இருக்கு!” என்று பெருமூச்சு எறிந்தார் சிவணி.

தாயையும், மனைவியையும் கவின் ஒரு சேர முறைத்துப் பார்க்க, ரமணன் நமட்டுச் சிரிப்புடன் சமாதானத்தில் இறங்கினார்.

**********


“அது உங்கப் பொண்ணு கையில தான் இருக்கு. எதையும் பளிச்சுன்னு உடைச்சுப் பேசாம, உள்ளுக்குள்ளே அழுத்தமா புதைச்சி வைச்சிக்கிட்டு மறுகறது எல்லாம் அப்பா, பொண்ணுக்கு கை வந்த கலை ஆச்சே...

அன்னிக்கு நீங்க செஞ்சீங்க, இன்னிக்கு இவள் செய்யறா. ஆகமொத்தம்... நீங்களும் நிம்மதியா இருக்க மாட்டீங்க, உங்களை சுத்தி இருக்கற மனுஷங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டீங்க!”

தன்னிடம் இருந்து விலகி எரிச்சலுடன் நொடித்துக் கொள்ளும் மனைவியை பாவமாகப் பார்த்தவர், “நான் தான் அதுக்கு அப்புறம் அப்படி எல்லாம் செய்யாம உன்கிட்ட ஓப்பனா தானே இருக்கேன்!” என்று அவரின் கையை பற்றிக் கொண்டு கெஞ்சலாகப் பார்த்தார்.

“ம்... இப்போ அது உங்கப் பொண்ணு டேர்ன்னு புரிஞ்சு அமைதியா ஏத்துக்கோங்க. சொல்லப் போனா... இவளை விட மது தான் பாவம், ஜாலியா இருக்கப் பையனை இவள் இப்படி உர்உர்ருன்னு இருந்து பரிதாபமா மாத்தாம இருந்தா சரி!”

“உனக்கு ரொம்பத் தான் லொள்ளு... அம்மு எப்பவும் அப்படியா இருக்கறா?” என்று மெத்தையில் சரிந்துப் படுக்கும் மனைவியை லேசாக முறைத்தார் கவின்.

“இல்லை தான்... ஆனா கோபம் வந்துட்டா எத்தனை கெஞ்சி மலை இறக்க வேண்டியதா இருக்கு, அதெல்லாம் அனுபவப் பட்டவங்களுக்கு தான் தெரியும். சரி... நான் கொஞ்ச நேரம் தூங்கறேன், காலையில நேரமா எழுந்தது அசதியா இருக்கு!” என்று கண்களை மூடிக் கொண்டார் சிவணி.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவர், “நான் வேணும்னா பாப்பாட்ட மதுவை பத்தி என்ன, ஏதுன்னு தெளிவா பேசிப் பார்க்கவா...” என்றார் பெற்றவர் வேகமாக.

“இதே ஃபார்ம்ல போய் உங்கப் பொண்ணுகிட்ட பாப்பான்னு ஆரம்பிச்சீங்க... அவ்வளவு தான் உங்க ஜோலி முடிஞ்சது!”

**********


அவனின் வார்த்தைகளில் கன்னங்கள் சூடேறுவதை தவிர்க்க, “ஆங்... பாருடா... அப்புறம்?” என்று கேலியாக சிரித்து, விழிகளில் மெலிதாக ஐலைனரை தீற்றினாள்.

“என்ன அப்புறம்?” என்று எழுந்து வந்தவன் அவளை பின்னிருந்து அணைக்க,

“மது...” என்று தடுமாறினாள் அவள்.

“நீ சொல்ல வேணாம்... நான் ஆயிரம் முறைச் சொல்வேன். ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...” என்று அவள் காதோரம் இதழ் பதித்து ஆடவன் குழைய ஆரம்பிக்க,

அவன் மீது பெரும் ஆசை வைத்து இருந்தப் பெண்ணின் மனமோ, அவனுடைய செயலில் இன்னமும் மயங்க ஆரம்பித்தது.

“மது...” என்று அவன் கைகளில் அவள் நெகிழத் தொடங்க,

“வெறும் பேர்ல மட்டும் தான்டி நான் மது... ஆனா நீதான் அத்தனை போதை தர்றே எனக்கு...” என்றவன் பிதற்றத் துவங்கவும், பெண்மை வேகமாக சுதாரித்தது.

அவனை அவசரமாக நகர்த்தியவள், “ப்ச்... இப்போ தான் புடவையை சரி பண்ணேன்!” என்று அலுப்புடன் கடிந்தவாறு மீண்டும் சரி செய்தாள்.

இதழ்களில் புன்னகை பெரிதாக விரிய, “ஆமா... உனக்கு ஸ்ஸாரி கட்டத் தெரியுமா லட்டு?” என்று ஆவலாக விசாரித்தான் மது.

“இது என்ன கேள்வி? கட்டத் தெரியாம தான் கட்டி இருக்கேனா நான்...” என்று அவன் முகம் பார்த்தாள்.

“இல்லை... என்னோட டீன் ஏஜ்ல அப்பாவை நான் ரொம்ப கலாய்ச்சு இருக்கேன்!”

“என்ன? எதுக்கு?” என்று வியப்புடன் விழிகளை விரித்தாள்.

“அம்மாவுக்கு ஸ்ஸாரி ப்ளீட்ஸ் எடுக்கச் சரியா வராதுன்னு அப்பா தான் எப்பவும் ஹெல்ப் பண்ணுவார்!” என்றவன் நமட்டை கடித்துச் சிரிக்க, நாயகியின் முகமும் ரசனையில் மலர்ந்தது.

“அதை நான் கிண்டல் பண்றேன்னு, உன் வொய்ஃப் வரும்போது நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கத் தான்டா போறேன்னு அப்பா பதிலுக்கு ஓட்டுவார், அது தான் கேட்டேன்!”

“ஹான்... அப்படின்னு பார்த்தா பல லேடீஸுக்கு அது கஷ்டம் தான். புடவையை சுலபமா கட்டற அளவுக்கு ப்ளீட்ஸ் எடுக்கறது சரியா படிமானமா வராது. ஆனா இப்போ எல்லாம் கட்டறதுக்கு முன்னாடியே நல்லா நீட்டா மடிப்பு எடுத்து தனியா வைச்சிட்டு, பங்ஷன் டைம்ல ஈஸியா நாங்க கட்டிடுவோம்!”

பெருமையாகச் சொல்பவளை புன்னகையுடன் பார்த்தவன், “ம்... டெக்னாலஜிக்கு ஈக்வலா லேடீஸ் நீங்களும் நல்லா டெவலப் ஆகிட்டு வர்றீங்க!” என்று மெச்சுதலாக இதழ்களை வளைத்தான்.

“அதே தான்...” என்று அலட்டலாய் தோள்களை குலுக்கியவளை, அவன் மீண்டும் ஆசையாய் கட்டி அணைக்க முயல, பெண் முரண்டினாள்.

“மது... என்ன இது? எப்போ பாரு... இதே வேலையா இருக்கீங்க!” என்று அவனை முறைத்தாள்.

“என்ன பண்றது? நீ என்னை அவ்வளவு அட்ராக்ட் பண்றே... தள்ளி நிக்கவே முடியலை!” என்று சிணுங்கினான் அவன்.

“அடி தான் விழும்... சரி வாங்க, கீழே போகலாம்!” என்று வாசலை நோக்கி விரைந்தாள்.

“ம்ஹும்... இது ஆகறது இல்லை. இந்த அக்கா வேற சொன்ன வேலையை ஒழுங்கா செய்தாளா என்னென்னு தெரியலை, அடுத்து வர்ற முகூர்த்தத்துல சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சிடனும்!”

தன்னை பின் தொடர்ந்து புலம்பிக் கொண்டே வந்தவனின் வார்த்தைகளில் நின்றவள், “இல்லை வேணாம்... நாம முதல்ல என்கேஜ்மென்ட் செஞ்சுக்கலாம்!” என்றாள் அவசரமாக.

“என்ன?” என்று முகம் சுளித்தவன், “அது எல்லாம் ஒன்னும் வேணாம்!” என வேகமாக மறுத்தான்.

“ப்ளீஸ் மது... நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி தான், நாம ஒவ்வொரு பிரொஸிஜர்ஸையும் என்ஜாய் பண்ணிச் செய்யலாம்!” என்று கண்களை சுருக்கி கெஞ்சினாள்.

**********


அங்கே தன் பெற்றோர், வீடு என விசாரித்துக் கொண்டு இருந்த மனிதரிடம், சிறுவன் பயந்துப் பயந்து விவரங்களை கக்கிக் கொண்டு இருந்தான்.

அருகில் வந்தப் பெண்ணின் முகத்தை பார்த்தவர், “என்னம்மா?” என்று கேட்க,

“மாமா... இங்கே எங்கேயாவது பக்கத்துல காபி ஷாப்ல போய் பேசலாம்!”

அவர் சம்மதிக்க, பையன் அங்கிருந்து கழன்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்தான்.

“நான் வீட்டுக்கு கிளம்பறேன், ப்ளீஸ்...”

“டேய்... ஒரு காபி குடிச்சிட்டுப் பேசிட்டு போகலாம்டா, வா வா... ஏன் இவ்வளவு பதட்டமாகுற?”

நண்பனாய் அவன் தோள் மீது கை போட்டு அவர் அழைத்துச் செல்ல, அச்சிறுவன் தான் மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் அவருடன் நடுங்கிக் கொண்டு நடந்தான்.

“ம்... என்ன சாப்பிடறீங்க?”

ஒரு மேசையின் முன்னே அமர்ந்ததும் ரமணன் மற்றவரை பார்த்து கேட்க, புனீத் பதறி அடித்துக் கொண்டு தனக்கு எதுவும் வேண்டாம் என மறுத்தான்.

“அட... நீ எங்க கெஸ்ட்டுடா, உன்னை எப்படி அப்படி விட முடியும்?” என்றவர் சிறுமியின் பக்கம் திரும்பி, “நீ சொல்லும்மா... இவனுக்கு என்ன பிடிக்கும்?” என்று வினவ, அவளோ பேய் விழி விழித்தாள்.

மதியோ, “ஹஹா மாமா... பிள்ளைங்க ரொம்ப பயப்படுதுங்க, விடுங்க!” என்று நகைத்தாள்.

முறுவலித்தவர், “ஓகே... எல்லோருக்கும் கோல்ட் காபி ஆர்டர் பண்ணலாம். காபி, டீ பிடிக்காதவங்க கூட கோல்ட் காபி குடிக்காம இருக்க மாட்டாங்க!” என்றபடி அதையே ஆர்டர் செய்தார்.

“ஆக்ட்சுவலி மாமா... நாம இவங்களை ஐஸ்க்ரீம் பார்லருக்கு கூட்டிட்டுப் போய் இருந்து இருக்கனும், பையன் அது தான் ஆசைப்பட்டு இருக்கான்!”

மதியின் கேலியில், “அப்படியாடா புனீத்?” என்று அவரும் வம்பில் இறங்கினார்.

அவனோ குனிந்த தலை நிமிராமல், கண்களில் நீர் மல்க அமர்ந்து இருந்தான்.

அதைக் கண்டு தவித்த கீர்த்தி, “ஸாரி புனீத்!” என்றாள் வேகமாக.

“ஹேய்... என்ன ஆச்சு?” என்று அப்பொழுது தான் அவன் முகத்தை சரியாக கவனித்தார் ரமணன்.

அவன் அவசரமாக கண்களை துடைத்துக் கொள்ள, “சியர்அப் மை பாய்... உன்னை நாங்க டீஸ் பண்ணலை, ரிலாக்ஸ் பண்ணத் தான் நினைச்சோம்!” என்று அவனை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினார்.

“இட்ஸ் ஓகே அங்கிள்... நான் கிளம்பறேனே...” என்றான் மீண்டும் தவிப்புடன்.

“நோ புனீத்... நாம கொஞ்சம் பேசறது பெட்டர்னு நினைக்கறேன். உன் மேலே தப்பு இல்லைன்னா நீ எதுக்காகவும் பயப்பட வேணாம். நாங்க உங்களை கிரிட்டிஸைஷ் பண்ண ட்ரை பண்ணலை. உங்களுக்கு ஒரு வெல்விஷரா சப்போர்ட் பண்ணத் தான் நினைக்கறோம்!”

பெரியவரை ஆச்சரியமுடன் நோக்கியவன், “அப்போ... நீங்க எங்க பேரண்ட்ஸ் கிட்டயோ, ஸ்கூல்லயோ எங்களை மாட்டிவிட நினைக்கலையா?” என்று கேட்டான்.

“நோ... நாட் அட் ஆல்!” என்றவர் கண்சிமிட்ட, அவனின் முகமும் அமைதியானது.

“ஓகே... கோல்ட் காபி வந்தாச்சு, ரிலாக்ஸா குடிங்க!” என்று அவரே இருவருக்கும் எடுத்துக் கொடுக்க, பிள்ளைகளின் மனதில் அவர் மீது பெரும் பிரமிப்பு தோன்றியது.


**********


“ஓகே... ஜோக்ஸ் அப்பார்ட். மதியை நான் ஏன் செலக்ட் பண்ணேன் தெரியுமா? அவள் எந்த இடத்துலயும் மதுவோட வளர்ச்சிக்கு தடையா இல்லை, அதாவது அவனை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ணலை. அவளும் அதே மாதிரி ஒரு நல்ல பொஸிஸன்ல படிச்சு வாழ்க்கையில முன்னேறி காண்பிச்சா.

இப்படி ஒரு பொறுப்பான நல்லப் பொண்ணு, நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்குமேன்னு என்னை யோசிக்க வைச்சா. அவளா எங்கேயும் தான் காதலை நிரூபிக்கலை, நாங்களே பிடிச்சுப் போய் பொண்ணு கேட்டோம். அப்படி அவளே தான் விருப்பத்தை சொல்லி இருந்தாலும், நான் சந்தோசமா இவங்க கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருப்பேன்!” என்று அவர்களின் முகம் பார்த்தார்.

இருவரின் தலையும் லேசாக அசைய, “கீர்த்தியை நினைச்சா இந்த அன்பும், மரியாதையும் உன் பேரன்ட்ஸுக்கு வர்றனும். அதே போல உன்னை நினைச்சு அவளோட பேரன்ட்ஸுக்கும் ரொம்ப பொறுப்பான பையன், தான் பொண்ணை நல்லா பார்த்துப்பான் அப்படின்னு ஒரு எண்ணம் வரனும்... புரியுதா?” என்று வினவினார்.

அவன், “எஸ் அங்கிள்!” என்றும் அவள், “புரியுது பெரியப்பா!” என்றும் ஏற்றுக் கொண்டனர்.


**********


Vizhiyil Theriyum Azhagu - Deepa Babu

 



விழியில் தெரியும் அழகு

கதைக்கரு


கதையை பத்திச் சொல்லனும்னா... வழக்கமாக நாவல் உலகத்தில் இருப்பது போல், நாயகன் நாயகியை சுற்றித் தான் சுழலும். ஆனால் அதன் மையமாக நாயகனின் அம்மா இருப்பார்.

Yaro Manathile - Deepa Babu

 


யாரோ மனதிலே


பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர்.

Alaipayum Oru Kili - Deepababu

 




அலைபாயும் ஒரு கிளி

கதைக்கரு

தான் கடந்து வந்தப் பாதையால் லேசான மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் தன் கணவனிடமும், அவன் தங்கையிடமும் ஆவேஷமாக வெளிக் காட்டுகிறாள். கிட்டத்தட்ட எதிர்மறை குணம் கொண்டு தங்களை வாட்டி எடுக்கும் மனைவியின் பிரச்சனை புரிந்து, நாயகன் எவ்வாறு அவளை மீட்டு எடுக்கிறான் என்பதே கதை.

Most Popular