மெல்ல சிரித்தவன், "இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை... எல்லா இடங்களிலும் நடப்பது தான். உனக்கு வெளி அனுபவம் குறைவு என்பதால் விவரம் தெரியவில்லை!" என்றான் ரமணன்.
அவனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று விரல்களால் ஷாலை இறுக்கியபடி சிந்தித்துக் கொண்டிருந்தவள் கார் ஓரிடத்தில் நிற்கவும், நிமிர்ந்து வெளியே பார்த்தாள்.
"நீ நினைத்துக் கொண்டிருப்பது போல் எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைடா... நமக்கு செய்வதற்கு சலித்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்!" என்றான் ரமணன் கசப்பாக.
"ஹேய் குட்டிபப்பூ... கண்ணுக்குத் தெரியாமல் நீ செய்கின்ற வேலையெல்லாம் புதிதாக வீட்டிற்கு வருகின்ற யாராவது பார்த்தால்... ஐயோ! இந்த வீட்டில் ஏதோ ஜெகன் மோகினி இருக்கும் போலிருக்கிறது என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!" என்று கலகலவென்று கண்களில் நீர் வழிய வாய் விட்டு சிரித்தான் ரமணன்.
வீட்டின் பின்புறத்தில் இருந்த குடிலைக் கண்டவுடன் அவன் முகம் மாறியது. கை விரல்களை இறுக்க மூடியவன், சட்டென்று வேகமாக நடந்து பாத்ரூமிற்குள் நுழைந்து ஷவர் அடியில் கண்களை மூடி நின்றான்.