*6*
"ஹேய் குட்டிபப்பூ... கண்ணுக்குத் தெரியாமல் நீ செய்கின்ற வேலையெல்லாம் புதிதாக வீட்டிற்கு வருகின்ற யாராவது பார்த்தால்... ஐயோ! இந்த வீட்டில் ஏதோ ஜெகன் மோகினி இருக்கும் போலிருக்கிறது என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!" என்று கலகலவென்று கண்களில் நீர் வழிய வாய் விட்டு சிரித்தான் ரமணன்.







