கனவுகள் பல கோடி
(இணையத்தில் வெளிவராத
நேரடிப் புத்தகம்)
கதைக்கரு
மனிதராய் பிறந்தவர்களுக்கே ஆசைக் கனவுகள் பல அவரவர் கற்பனையில் பலமாய் உதித்திடுமாம். அவை பலருக்கு வசப்படவும் செய்யலாம், இல்லை.. சிலருக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கலாம். ஆனாலும் கனவு என்பது சில நிமிட கற்பனை உலகில் நம்மை ஆனந்தமாக மூழ்கடிக்க செய்ய கூடியது தான். அப்படியான இனிய நினைவிலும், எதிர்பார்ப்பிலும் மூழ்கி கனவு காணும் நாயகியும், நாயகனும் தங்களது வாழ்வில் அவற்றுக்கு வண்ணங்கள் கொடுத்து, எண்ணங்களாய் உருமாற்றி செயல் ஆற்றினார்களா, இல்லையா என்பதை கதையில் தெரிந்து கொள்வோம்.
என்னுடைய பாணியில் ஆசிரியர், மாணவிக்கு இடையே இரு குடும்பத்தாராலும் முடிவு செய்யப்படும் திருமணமும், அவர்களின் உணர்வுகளும் கதையாக விரிகிறது. அதோடு மருமகள் எழுத்தாளர் ஆகவும், மாமியார் தீவிர ஆன்லைன் வாசகி ஆகவும் உங்களில் ஒருவராக வருகிறார்கள்.
ஆங்... உங்களிடம் இதைச் சொல்ல மறந்து விட்டேனே, எனது ஆக்கத்தில் 25வது நாவலாக வெளியாகிறது இக்கதை. இத்தனை தூரம் என்னை நலமாய் செதுக்கி அழைத்து வந்து இருக்கும் இறைவனுக்கும், வாசக நட்புக்களுக்கும், விநியோகிஸ்தருக்கும், எனது முன்னேற்றத்தில் உறுதுணையாய் இருந்து வழி நடத்திச் செல்லும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
தீபா பாபு
தன்னை மனதார வாழ்த்தும் பெரியவரின் சொல்லில் முகம் மலர்ந்தவள், அவரை நிமிர்ந்துப் பார்த்து மெல்ல முறுவலித்தாள்.
“இப்போ தான் பொண்ணு முகத்துல கொஞ்சம் தெளிவு வந்து இருக்கு!” என்கிற கேலிக் குரலில் அவரின் புறம் பார்வையை திருப்பினாள் பெண்.
“நான் தான்மா மாப்பிள்ளையோட அப்பா, ரிட்டையர்ட் தமிழ் வாத்தியார்!”
செழியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, சின்ன வியப்புடன் அவரிடம் மென்னகை புரிந்தாள் அவள்.
“பிரியஞ்சலி தானே...?”
பேச்சை வளர்த்துவதற்காக அவர் கேட்ட அந்தக் கேள்வி மகனின் உள்ளத்தை திடுக்கிட செய்து, பெண்ணின் முகத்தை திகைப்புடன் ஊன்றிப் பார்க்க வைத்தது.
அவள் வந்ததில் இருந்தே மனதில் இருந்த சலிப்பின் காரணமாக அவளை சரியாக கவனிக்காது, ஒரு முறை மட்டும் அசுவாரசியமாக பார்த்து வைத்து இருந்தவன், இப்பொழுது தான் நன்றாக பார்த்தான்.
இருந்தும் அவனால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தப் பெயர் மட்டும் வருடங்கள் கடந்தும் மறவாமல் மூளையின் நியூரான்களில் ஆழமாக பதிந்து இருந்தது.
‘என்ன பேரு இது? பிரியஞ்சலி... ஒரு அட்டெண்டென்ஸ் எடுக்க சட்டுன்னு வாயில நுழையுதா..? இதுல நீ வாங்குற மார்க்குக்கு இந்தப் பேரை வேற கஷ்டப்பட்டு கூப்பிட்டு பேப்பரை கொடுக்கனும் நான்!’ என அன்று தன்னெதிரே தவிப்புடன் நின்று இருந்த சிறு பெண்ணை பார்த்து முறைத்தபடி, சிடுசிடுவென சாடியது மின்னலென அவன் நினைவில் வந்துப் போனது.
“என்ன மாறா... நீ ஏதாவது பேசனுமா?”
தந்தையின் சொல்லில் தன்னை மீட்டவன் அவள் முகம் நோக்க, அவளும் அப்பொழுது அவனைத்தான் பதற்றத்துடன் பார்த்து இருந்தாள்.
‘ஸோ... அவள் தான். அதே மாதிரி இவளை பெண் பார்க்க, நான் தான் வரேன்னு என்னை போல இவளுக்கும் விஷயம் தெரியலை!’ என்று பெண்ணை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தான்.
அவன் பார்வையில் விரைந்து இமைகளை தாழ்த்திக் கொண்டவளின் முகம் லேசாக கலங்கிப் போய் இருந்தது.
‘மாப்பிள்ளை... மேத்ஸ் ஸாரா?’ என அதிர்ந்தவளின் இதயம், இப்பொழுது தான் தனது முழு அசுர வேகத்தையும் தன் துடிப்பில் காட்டியது.
‘ஒரு ஆறு வருஷத்துல சட்டுன்னு அடையாளம் பிடிபடாத அளவுக்கு கொஞ்சம் உடம்பு வச்சு பெரியவளா தெரியறாளே... அப்போ எல்லாம் ஒட்டடை குச்சி மாதிரி தானே இருப்பா...’
“என்ன யோசனை மாறா? பேசறியான்னு கேட்டேன், இல்ல... எதுவும் தனியா பேசறீங்களா?”
அவள் பதைபதைப்போடு இவனை பெற்றவரை பார்ப்பதை கண்டவன், “இல்ல இருக்கட்டும்பா.. வேணாம்!” என்று உடனே மறுத்து விட்டான்.
“ஓ... சரி, நீ எதுவும் பேச விரும்பறியாமா?”
அடுத்து தன்னிடம் நேரடியாக கேட்பவரை மிரண்டு போய் பார்த்து, அவசரமாக மறுத்து தலை அசைத்தாள். வாத்தியின் விழிகள் அவளையே அழுத்தமாக கவனித்து இருந்தது.
பூங்கோதை எதிலும் கலந்து கொள்ளவும் இல்லை, வாயையும் திறக்கவில்லை. ஏற்கனவே விருப்பம் இல்லாமல் கிளம்பி வந்தவருக்கு, வீட்டை பார்த்து இன்னமுமே மனது சுணங்கித்தான் போனது.
“என்னம்மா கோதை... நீ அமைதியா இருக்கியே? உனக்கு ஏதாவது கேட்கனும்னு இருந்தா இப்பவே வெளிப்படையா கேட்டுடு!”
பன்னீரின் பேச்சில் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவர், திரும்பி தன் கணவரையும், மகனையும் நோக்கினார். அவர்கள் இருவருமே இவரை அமைதியாக கவனித்து இருக்க, மெல்லிய பெருமூச்சை வெளியேற்றினார்.
“எனக்கு ஒன்னும் இல்லை அண்ணா, வீட்லயே பேசிட்டு வந்தது தானே... அடுத்து என்னென்னு நீங்க பேசி முடிவு எடுங்க!”
“என்னப்பா செழியா?” என நண்பனிடம் கேட்டார் அவர்.
“அவ்வளவு தான்... பையனுக்கும், பொண்ணுக்கும் பிடிச்சுடுச்சுன்னா, வீட்டுக்குப் போய் கலந்து பேசி நல்ல நாள் பார்த்துட்டு அடுத்து கல்யாண வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்!”
“ஆமா... யாரும் இன்னும் பொண்ணு, மாப்பிள்ளையோட சம்மதத்தை நேரடியா கேட்கவே இல்லையே...” என்று பன்னீரின் மனைவி கேட்டு வைக்க, பிரியாவின் முகம் கலக்கம் கொண்டது.
தன் மீதே நிலைத்து இருக்கும் ஆழ்ந்த பார்வையுடன் கணவன் திரும்பி வரவும், இவளின் நெஞ்சு உலர்ந்து போக பரிதவிப்புடன் நின்று இருந்தாள் பெண்.
“ஏன் நிக்கற? எதுவும் வேணுமா..?”
“இ.. இல்ல...” என திணறி மறுத்தாள்.
“அப்புறம் என்ன? உட்காரு!” என்று எதிரே கை காட்டியவாறு மெத்தையில் அமர்ந்தான்.
அவள் பெரும் தயக்கத்துடன் கட்டிலின் விளிம்பில் மெதுவாக அமர, அவளை மேலிருந்து கீழ்வரை விழிகளால் அளந்தான் அவன்.
“ஸோ.. இன்னியில இருந்து நீ என்னோட வொய்ப், ரைட்?”
தவிப்புடன் அவனிடம் ஒரு முறை உயர்ந்த விழிகள் மீண்டும் தாழ்ந்து விட, நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் ஆடவன்.
“லைஃபை நினைச்சா ஒரு நேரம் ரொம்ப சர்ப்ரைஸிங்கா தான் இருக்கு. இத்தனை வருஷம் கழிச்சு, உன்னை இப்படி ஒரு சிட்சுவேஷன்ல திரும்ப மீட் செய்வேன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணலை!” என்று உதட்டை பிதுக்கினான்.
அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, அவன் பேசுவதை எல்லாம் மௌனமாக காதில் வாங்கியபடி, தன் மடியில் பார்வையை பதித்து அமர்ந்து இருந்தாள்.
மாறனின் முகத்தில் மெல்லிய சலிப்பு தோன்ற, அதன் வீரியம் வார்த்தைகளாக உருமாறி பெண்ணிடத்தில் அழுத்தமாக சென்று சேர்ந்தது.
“ஆக்ட்சுவலி உன்னை வொய்ஃபா அக்செப்ட் பண்றதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நீ என்னோட ஓல்ட் ஸ்டூடண்ட் அப்படிங்கறது சின்ன சங்கடம்னா, பளிச்சுன்னு பேச ட்ரை பண்ணாம ரொம்ப இன்ட்ரோவர்ட்டா இருக்கறது அடுத்த இம்சையா இருக்கு. என்ன சொல்றது? ப்ச்... ஓகே, முதல்ல என்னை நிமிர்ந்து பார்த்து நேரா பேசப் பழகு, அப்புறமா மத்ததை பார்த்துக்கலாம்!” என்றான் ஒருவித எரிச்சலுடன்.
அவனின் கடுமையில் அழுது விடாமல் இருக்க, கை விரல்களில் புடவையை இறுக்கியவள், தலையை மட்டும் லேசாக அசைத்து வைத்தாள்.
“ஹும்.. இதுக்கும் இவ்வளவு தான் ரியாக்ஸன்!” என முனகி விட்டு அவன் எழ, அவளும் பின்னோடு எழுந்துக் கொள்ள முயன்றாள்.
“ஹே... ஃபர்ஸ்ட்டு உட்காரு, இன்னமும் ஸ்கூல் படிக்கற நினைப்புலயே இருக்காத...”
அவளை அதட்டியபடி அலமாரியிடம் சென்று இரவு உடை ஒன்றை கையில் எடுத்தவாறு குளியலறை நோக்கி திரும்பியவன், சட்டென்று நின்று அவளிடம் கேள்வி எழுப்பினான்.
“ஆமா... நீதான் தலையவே நிமிர்த்த மாட்டியே, அப்போ இங்கேயே உன் முன்னாடி நான் ட்ரஸ் சேஞ் பண்றதுல ஒன்னும் பிரச்சனை இருக்காது இல்ல..?”
அதுவரை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து அவனை திகைப்புடன் பார்க்க, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
பதில் சொல்வது அறியாது பதற்றத்துடன் கைவிரல்களை பிசைந்தபடி அவள் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல, “அட ஆண்டவா.. நீதான் என்னை காப்பாத்தனும்!” என்று மேலே பார்த்து கூவி விட்டு, குளியல் அறைக்குள் நுழைந்தான் மாறன்.
கதவை தாழிடும் ஓசையை கேட்டப் பிறகு தான் சிறிது தெம்பாக தலையை உயர்த்தி, சுற்றும்முற்றும் அறையை பார்வை இட்டாள் பிரியா.
ஒவ்வொன்றாக அலசி எடுத்த விழிகளில், அங்கே ஓரமாக இருந்த மேசையின் மீது அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பல்வேறு கணித புத்தகங்கள் விழவும், பீதியில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
‘அச்சோ... எதைப் பார்த்து நான் அரண்டு ஓடினேனோ, திரும்பவும் அங்கேயே வந்து சிக்கிக்கிட்டேனே...’
“என்ன அப்படி வெறிச்சு பார்க்கற? வேணும்னா எடுத்துப் படிச்சு பாரு!” என்ற நக்கலான குரல் காதில் விழவும் தான், மாறன் வெளியே வந்து விட்டதை உணர்ந்து திடுக்கிட்டு போனாள் பெண்.
முதன் முதலாக அவனை நேருக்கு நேர் பார்த்து விழித்தவளின் செயலில் புன்னகை வரப் பார்க்க, அதை முயன்று அடக்கினான் நாயகன்.
“எல்லாமே அப்படியே ரீச் ஆகுதுன்னு சொல்லிட முடியாது மாறா.. சினிமால எப்படி யதார்த்தத்தை தாண்டி அதிரடியையும், அடாவடியையும் அதிக மக்கள் ரசிக்கறாங்களோ... அதே போல தான் நாவல்களும் பல விதமா பரிணாமம் அடைஞ்சு, அதுல வர்ற அடாவடி ஹீரோ, ஹீரோயின் கதைங்க தான் இப்போ ரீடர்ஸ் கிட்ட அதிகம் சக்சஸ் ஆகுது.
ஆனா அதைத் தாண்டி யதார்த்தத்தை விரும்புற வாசகர்கள் வட்டமும் குறிப்பிட்ட அளவுல இருக்கத்தான் செய்யுது. அவங்கள்ல ஒரு சில ரீடர்ஸ் கதையில வர சில இடங்களை அவங்க லைஃப்ல ஃபேஸ் பண்றதா, ஓப்பனாவே ரைட்டர்ஸ் கிட்ட ஷேர் பண்றதை நான் ஸைட்லயும், பேஸ்புக்லயும் பார்த்து இருக்கேன்!”
“ஹோ... பட்.. நான் ஒரு ஆர்ட்டிக்கிள் படிச்சேன்மா. இன்னிக்கு இருக்குற பேமிலி நாவல்ஸ் எல்லாம் ரொம்பவே தரம் இறங்கி, ரொமான்ஸ் அப்படிங்கிற பேருல லஸ்ட் பேஸ்ட் ஸ்டோரீஸ் தான் நிறைய என்கரேஜ் பண்றாங்க, எல்லாமே வெறும் வியாபாரத்துக்கும், பணத்துக்கும் நம்ம சமூக அமைப்பையே சீரழிக்கறாங்கன்னு ஒரு ஃபெமிலியர் மேல்(male) ரைட்டர் பயங்கரமா விமர்சனம் செஞ்சு இருந்தாங்க. ஸோ, நான் அதுல இப்படி ஒரு நல்ல விஷயத்தை எதிர்பார்க்கலை, நீங்க சொல்றது கொஞ்சம் புதுசா தான் இருக்கு!” என்று தோள்களை குலுக்கினான்.
“ஆமாடா... நீ சொல்ற அந்த இலக்கியவாதியை எங்க பொண்ணுங்க எல்லாம் பேஸ்புக்ல கிழி கிழின்னு கிழிக்கத்தான் செஞ்சாங்க. அவரு சொல்ற மாதிரி மோசமான விஷயங்கள் இருக்குன்னாலும், பொத்தாம் பொதுவா எல்லா பெண் எழுத்தாளர்களையும் குறி வச்சு தாக்கிப் பேசினா, அவங்க எப்படி சும்மா இருப்பாங்க? குடும்ப நாவலுக்கு இருக்குற மிகப் பெரிய சாபம், சினிமால இருக்கற மாதிரி தரச் சான்றிதழ் இல்லாதது தான்.
அதனால அந்த வகையில மோசமா வெளியில வர கதைங்க எல்லாம் சுலபமா, குடும்ப நாவல் முக்காடு போட்டுட்டு நல்லா கல்லா கட்டிக்குறாங்க. இதுவே அப்படி ஒரு சர்ட்டிபிக்கேஷனோட நாவலுங்க வெளியில வருதுன்னு வை, தன்னோட புத்தகத்துக்கு மேலே “A” முத்திரை குத்தி கதையை வெளியில விடறதுக்கு ரொம்பவே தயங்குவாங்க. அதோட சமூகத்துல அவங்க மேலே ஒரு மோசமான அடையாளமும் விழுந்துடும் இல்ல... அதுக்கு பயந்தவங்களும் அதுல இருக்கத்தானே செய்வாங்க. பாரு.. எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ போயாச்சு!”
“கண்டிப்பாம்மா... எதுக்கு இப்படி மைக் பிடிச்சு பேசாத குறையா, இவ்வளவு தம் கட்டி நீங்க பேசறீங்களோ எனக்கு கொஞ்சமும் புரியவே இல்லை!” என்று தளர்வாக சாய்ந்து அமர்ந்தான் மாறன்.
“ம்... இப்படி பேச வேண்டியவளுக்கு பதிலா தான், நான் அவள் இடத்துல இருந்து பேசிட்டு இருக்கேன்!”
“ஹான்... என்ன? ப்ச்... மறுபடியும் உளற ஆரம்பிக்காதீங்க, சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லி முடிங்க!” என்றான் அவன் சலிப்பாக.
“சரி சரி.. அந்த ஜீவிகா பொண்ணை பத்தி பேச வந்து தான், இவ்வளவு தூரம் வேற விஷயங்களை பேசியாச்சு!”
“ஓகே, சொல்லுங்க. அந்தப் பொண்ணு ரொம்ப நல்லா கதை எழுதுவாளா?”
“நல்லா கதை எழுதுவாளாவா..? சரியா போச்சு போ, அவ்வளவு அருமையா எழுதுவா!”
“ம்...” என இழுத்து தன் தாடையை வருடியவாறு, “பில்டப் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே!” என்றான் கேலியாக.
“போடா... திரும்பவும் ஏதாவது கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடாத. இதுவரை அவள் எழுதின கதைகளோட பிளாட்டை சொல்றேன் கேளு, நீயே ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிடுவ!”
ஆர்வமாக கூறும் தாயை புன்சிரிப்புடன் பார்த்தவன், “ம்ஹும்... பார்க்கலாம்!” என்று நக்கலாக சிரித்தான்.
“டேய்...” என மீண்டும் கடுப்பானவர், அவன் தோளிலே ஒன்று ஓங்கி வைத்தார்.
அந்நேரம், “அத்தை...” என திரும்பவும் பெண் தயக்கத்துடன் அழைத்தாள்.
“மறுபடியும் என்னம்மா?” என்று கோதையும் அலுப்புடன் கேட்டார்.
“இல்ல... நீங்க ஆன்லைன் கதைங்க எல்லாம் ரொம்ப படிப்பீங்களா?” என்றாள் மெல்லமாக.
“படிப்பாளாவா..? அவள் தினமும் ஒரு தடவையாவது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காம தூங்க மாட்டா!”
செழியன் வேகமாக கூற, அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு, “ஆமா... படிப்பேன்!” என மருமகளிடம் அழுத்தமாக மொழிந்தார் அப்பெண்மணி.
“உங்க பேரை நான் அங்கே பார்த்தது இல்லையே...”
“ஏய்... இரு இரு, அப்போ நீயும் அம்மாவோட கேஸ் தானா.. நிறைய கதைங்க படிப்பியா?”
திகைப்புடன் கேட்கும் கணவனிடம் திரும்பியவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாற, “இருடா... முதல்ல நாங்க பேசி முடிச்சிடறோம்!” என்று மகனை தடுத்தார் பெற்றவர்.
“பேஸ்புக்ல, சைட்ல எல்லாம் என்னோட ப்ரொபைல் நேம்.. பூங்கோதை இல்ல, கோதை நாச்சியார்!”
அவர் கேலிச் சிரிப்புடன் மொழிய, “ஓ...” என இழுத்தவளின் இதழ்களும் லேசான வெட்கப் புன்னகையில் நெளிந்தது.
ஆங்... உங்களிடம் இதைச் சொல்ல மறந்து விட்டேனே, எனது ஆக்கத்தில் 25வது நாவலாக வெளியாகிறது இக்கதை. இத்தனை தூரம் என்னை நலமாய் செதுக்கி அழைத்து வந்து இருக்கும் இறைவனுக்கும், வாசக நட்புக்களுக்கும், விநியோகிஸ்தருக்கும், எனது முன்னேற்றத்தில் உறுதுணையாய் இருந்து வழி நடத்திச் செல்லும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
தீபா பாபு
Kanavugal Pala Kodi - Kindle Link
**********
கதையிலிருந்து சிறு துளிகள்
தன்னை மனதார வாழ்த்தும் பெரியவரின் சொல்லில் முகம் மலர்ந்தவள், அவரை நிமிர்ந்துப் பார்த்து மெல்ல முறுவலித்தாள்.
“இப்போ தான் பொண்ணு முகத்துல கொஞ்சம் தெளிவு வந்து இருக்கு!” என்கிற கேலிக் குரலில் அவரின் புறம் பார்வையை திருப்பினாள் பெண்.
“நான் தான்மா மாப்பிள்ளையோட அப்பா, ரிட்டையர்ட் தமிழ் வாத்தியார்!”
செழியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, சின்ன வியப்புடன் அவரிடம் மென்னகை புரிந்தாள் அவள்.
“பிரியஞ்சலி தானே...?”
பேச்சை வளர்த்துவதற்காக அவர் கேட்ட அந்தக் கேள்வி மகனின் உள்ளத்தை திடுக்கிட செய்து, பெண்ணின் முகத்தை திகைப்புடன் ஊன்றிப் பார்க்க வைத்தது.
அவள் வந்ததில் இருந்தே மனதில் இருந்த சலிப்பின் காரணமாக அவளை சரியாக கவனிக்காது, ஒரு முறை மட்டும் அசுவாரசியமாக பார்த்து வைத்து இருந்தவன், இப்பொழுது தான் நன்றாக பார்த்தான்.
இருந்தும் அவனால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தப் பெயர் மட்டும் வருடங்கள் கடந்தும் மறவாமல் மூளையின் நியூரான்களில் ஆழமாக பதிந்து இருந்தது.
‘என்ன பேரு இது? பிரியஞ்சலி... ஒரு அட்டெண்டென்ஸ் எடுக்க சட்டுன்னு வாயில நுழையுதா..? இதுல நீ வாங்குற மார்க்குக்கு இந்தப் பேரை வேற கஷ்டப்பட்டு கூப்பிட்டு பேப்பரை கொடுக்கனும் நான்!’ என அன்று தன்னெதிரே தவிப்புடன் நின்று இருந்த சிறு பெண்ணை பார்த்து முறைத்தபடி, சிடுசிடுவென சாடியது மின்னலென அவன் நினைவில் வந்துப் போனது.
“என்ன மாறா... நீ ஏதாவது பேசனுமா?”
தந்தையின் சொல்லில் தன்னை மீட்டவன் அவள் முகம் நோக்க, அவளும் அப்பொழுது அவனைத்தான் பதற்றத்துடன் பார்த்து இருந்தாள்.
‘ஸோ... அவள் தான். அதே மாதிரி இவளை பெண் பார்க்க, நான் தான் வரேன்னு என்னை போல இவளுக்கும் விஷயம் தெரியலை!’ என்று பெண்ணை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தான்.
அவன் பார்வையில் விரைந்து இமைகளை தாழ்த்திக் கொண்டவளின் முகம் லேசாக கலங்கிப் போய் இருந்தது.
‘மாப்பிள்ளை... மேத்ஸ் ஸாரா?’ என அதிர்ந்தவளின் இதயம், இப்பொழுது தான் தனது முழு அசுர வேகத்தையும் தன் துடிப்பில் காட்டியது.
‘ஒரு ஆறு வருஷத்துல சட்டுன்னு அடையாளம் பிடிபடாத அளவுக்கு கொஞ்சம் உடம்பு வச்சு பெரியவளா தெரியறாளே... அப்போ எல்லாம் ஒட்டடை குச்சி மாதிரி தானே இருப்பா...’
“என்ன யோசனை மாறா? பேசறியான்னு கேட்டேன், இல்ல... எதுவும் தனியா பேசறீங்களா?”
அவள் பதைபதைப்போடு இவனை பெற்றவரை பார்ப்பதை கண்டவன், “இல்ல இருக்கட்டும்பா.. வேணாம்!” என்று உடனே மறுத்து விட்டான்.
“ஓ... சரி, நீ எதுவும் பேச விரும்பறியாமா?”
அடுத்து தன்னிடம் நேரடியாக கேட்பவரை மிரண்டு போய் பார்த்து, அவசரமாக மறுத்து தலை அசைத்தாள். வாத்தியின் விழிகள் அவளையே அழுத்தமாக கவனித்து இருந்தது.
பூங்கோதை எதிலும் கலந்து கொள்ளவும் இல்லை, வாயையும் திறக்கவில்லை. ஏற்கனவே விருப்பம் இல்லாமல் கிளம்பி வந்தவருக்கு, வீட்டை பார்த்து இன்னமுமே மனது சுணங்கித்தான் போனது.
“என்னம்மா கோதை... நீ அமைதியா இருக்கியே? உனக்கு ஏதாவது கேட்கனும்னு இருந்தா இப்பவே வெளிப்படையா கேட்டுடு!”
பன்னீரின் பேச்சில் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவர், திரும்பி தன் கணவரையும், மகனையும் நோக்கினார். அவர்கள் இருவருமே இவரை அமைதியாக கவனித்து இருக்க, மெல்லிய பெருமூச்சை வெளியேற்றினார்.
“எனக்கு ஒன்னும் இல்லை அண்ணா, வீட்லயே பேசிட்டு வந்தது தானே... அடுத்து என்னென்னு நீங்க பேசி முடிவு எடுங்க!”
“என்னப்பா செழியா?” என நண்பனிடம் கேட்டார் அவர்.
“அவ்வளவு தான்... பையனுக்கும், பொண்ணுக்கும் பிடிச்சுடுச்சுன்னா, வீட்டுக்குப் போய் கலந்து பேசி நல்ல நாள் பார்த்துட்டு அடுத்து கல்யாண வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்!”
“ஆமா... யாரும் இன்னும் பொண்ணு, மாப்பிள்ளையோட சம்மதத்தை நேரடியா கேட்கவே இல்லையே...” என்று பன்னீரின் மனைவி கேட்டு வைக்க, பிரியாவின் முகம் கலக்கம் கொண்டது.
**********
அவர்கள் வெறுமனே சாற்றிச் சென்ற கதவை அவன் தாழிடுவதை மெதுவாக இமைகளை உயர்த்தி பார்வை இட்டவளுக்கு, அப்பொழுதே கட்டிலின் அலங்காரமும், அவன் எழுந்தப் பின்பும் அவள் இன்னமும் அமர்ந்தே இருப்பதும் மூளையில் உறைக்க, அவசரமாக எழுந்து நின்றாள்.தன் மீதே நிலைத்து இருக்கும் ஆழ்ந்த பார்வையுடன் கணவன் திரும்பி வரவும், இவளின் நெஞ்சு உலர்ந்து போக பரிதவிப்புடன் நின்று இருந்தாள் பெண்.
“ஏன் நிக்கற? எதுவும் வேணுமா..?”
“இ.. இல்ல...” என திணறி மறுத்தாள்.
“அப்புறம் என்ன? உட்காரு!” என்று எதிரே கை காட்டியவாறு மெத்தையில் அமர்ந்தான்.
அவள் பெரும் தயக்கத்துடன் கட்டிலின் விளிம்பில் மெதுவாக அமர, அவளை மேலிருந்து கீழ்வரை விழிகளால் அளந்தான் அவன்.
“ஸோ.. இன்னியில இருந்து நீ என்னோட வொய்ப், ரைட்?”
தவிப்புடன் அவனிடம் ஒரு முறை உயர்ந்த விழிகள் மீண்டும் தாழ்ந்து விட, நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் ஆடவன்.
“லைஃபை நினைச்சா ஒரு நேரம் ரொம்ப சர்ப்ரைஸிங்கா தான் இருக்கு. இத்தனை வருஷம் கழிச்சு, உன்னை இப்படி ஒரு சிட்சுவேஷன்ல திரும்ப மீட் செய்வேன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணலை!” என்று உதட்டை பிதுக்கினான்.
அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, அவன் பேசுவதை எல்லாம் மௌனமாக காதில் வாங்கியபடி, தன் மடியில் பார்வையை பதித்து அமர்ந்து இருந்தாள்.
மாறனின் முகத்தில் மெல்லிய சலிப்பு தோன்ற, அதன் வீரியம் வார்த்தைகளாக உருமாறி பெண்ணிடத்தில் அழுத்தமாக சென்று சேர்ந்தது.
“ஆக்ட்சுவலி உன்னை வொய்ஃபா அக்செப்ட் பண்றதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நீ என்னோட ஓல்ட் ஸ்டூடண்ட் அப்படிங்கறது சின்ன சங்கடம்னா, பளிச்சுன்னு பேச ட்ரை பண்ணாம ரொம்ப இன்ட்ரோவர்ட்டா இருக்கறது அடுத்த இம்சையா இருக்கு. என்ன சொல்றது? ப்ச்... ஓகே, முதல்ல என்னை நிமிர்ந்து பார்த்து நேரா பேசப் பழகு, அப்புறமா மத்ததை பார்த்துக்கலாம்!” என்றான் ஒருவித எரிச்சலுடன்.
அவனின் கடுமையில் அழுது விடாமல் இருக்க, கை விரல்களில் புடவையை இறுக்கியவள், தலையை மட்டும் லேசாக அசைத்து வைத்தாள்.
“ஹும்.. இதுக்கும் இவ்வளவு தான் ரியாக்ஸன்!” என முனகி விட்டு அவன் எழ, அவளும் பின்னோடு எழுந்துக் கொள்ள முயன்றாள்.
“ஹே... ஃபர்ஸ்ட்டு உட்காரு, இன்னமும் ஸ்கூல் படிக்கற நினைப்புலயே இருக்காத...”
அவளை அதட்டியபடி அலமாரியிடம் சென்று இரவு உடை ஒன்றை கையில் எடுத்தவாறு குளியலறை நோக்கி திரும்பியவன், சட்டென்று நின்று அவளிடம் கேள்வி எழுப்பினான்.
“ஆமா... நீதான் தலையவே நிமிர்த்த மாட்டியே, அப்போ இங்கேயே உன் முன்னாடி நான் ட்ரஸ் சேஞ் பண்றதுல ஒன்னும் பிரச்சனை இருக்காது இல்ல..?”
அதுவரை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து அவனை திகைப்புடன் பார்க்க, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
பதில் சொல்வது அறியாது பதற்றத்துடன் கைவிரல்களை பிசைந்தபடி அவள் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல, “அட ஆண்டவா.. நீதான் என்னை காப்பாத்தனும்!” என்று மேலே பார்த்து கூவி விட்டு, குளியல் அறைக்குள் நுழைந்தான் மாறன்.
கதவை தாழிடும் ஓசையை கேட்டப் பிறகு தான் சிறிது தெம்பாக தலையை உயர்த்தி, சுற்றும்முற்றும் அறையை பார்வை இட்டாள் பிரியா.
ஒவ்வொன்றாக அலசி எடுத்த விழிகளில், அங்கே ஓரமாக இருந்த மேசையின் மீது அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பல்வேறு கணித புத்தகங்கள் விழவும், பீதியில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
‘அச்சோ... எதைப் பார்த்து நான் அரண்டு ஓடினேனோ, திரும்பவும் அங்கேயே வந்து சிக்கிக்கிட்டேனே...’
“என்ன அப்படி வெறிச்சு பார்க்கற? வேணும்னா எடுத்துப் படிச்சு பாரு!” என்ற நக்கலான குரல் காதில் விழவும் தான், மாறன் வெளியே வந்து விட்டதை உணர்ந்து திடுக்கிட்டு போனாள் பெண்.
முதன் முதலாக அவனை நேருக்கு நேர் பார்த்து விழித்தவளின் செயலில் புன்னகை வரப் பார்க்க, அதை முயன்று அடக்கினான் நாயகன்.
**********
உண்மையிலேயே வியந்து போன மாறன், “ஜஸ்ட்.. ஒரு என்டர்டெயின்மென்ட் நாவல்ல நிஜமாவே இவ்வளவு விஷயங்கள் இருக்குதாம்மா? அந்த அளவுக்கு மக்கள் கிட்ட இது எல்லாம் ரீச் ஆகுதா..!” என்றான் ஆச்சரியமாக.“எல்லாமே அப்படியே ரீச் ஆகுதுன்னு சொல்லிட முடியாது மாறா.. சினிமால எப்படி யதார்த்தத்தை தாண்டி அதிரடியையும், அடாவடியையும் அதிக மக்கள் ரசிக்கறாங்களோ... அதே போல தான் நாவல்களும் பல விதமா பரிணாமம் அடைஞ்சு, அதுல வர்ற அடாவடி ஹீரோ, ஹீரோயின் கதைங்க தான் இப்போ ரீடர்ஸ் கிட்ட அதிகம் சக்சஸ் ஆகுது.
ஆனா அதைத் தாண்டி யதார்த்தத்தை விரும்புற வாசகர்கள் வட்டமும் குறிப்பிட்ட அளவுல இருக்கத்தான் செய்யுது. அவங்கள்ல ஒரு சில ரீடர்ஸ் கதையில வர சில இடங்களை அவங்க லைஃப்ல ஃபேஸ் பண்றதா, ஓப்பனாவே ரைட்டர்ஸ் கிட்ட ஷேர் பண்றதை நான் ஸைட்லயும், பேஸ்புக்லயும் பார்த்து இருக்கேன்!”
“ஹோ... பட்.. நான் ஒரு ஆர்ட்டிக்கிள் படிச்சேன்மா. இன்னிக்கு இருக்குற பேமிலி நாவல்ஸ் எல்லாம் ரொம்பவே தரம் இறங்கி, ரொமான்ஸ் அப்படிங்கிற பேருல லஸ்ட் பேஸ்ட் ஸ்டோரீஸ் தான் நிறைய என்கரேஜ் பண்றாங்க, எல்லாமே வெறும் வியாபாரத்துக்கும், பணத்துக்கும் நம்ம சமூக அமைப்பையே சீரழிக்கறாங்கன்னு ஒரு ஃபெமிலியர் மேல்(male) ரைட்டர் பயங்கரமா விமர்சனம் செஞ்சு இருந்தாங்க. ஸோ, நான் அதுல இப்படி ஒரு நல்ல விஷயத்தை எதிர்பார்க்கலை, நீங்க சொல்றது கொஞ்சம் புதுசா தான் இருக்கு!” என்று தோள்களை குலுக்கினான்.
“ஆமாடா... நீ சொல்ற அந்த இலக்கியவாதியை எங்க பொண்ணுங்க எல்லாம் பேஸ்புக்ல கிழி கிழின்னு கிழிக்கத்தான் செஞ்சாங்க. அவரு சொல்ற மாதிரி மோசமான விஷயங்கள் இருக்குன்னாலும், பொத்தாம் பொதுவா எல்லா பெண் எழுத்தாளர்களையும் குறி வச்சு தாக்கிப் பேசினா, அவங்க எப்படி சும்மா இருப்பாங்க? குடும்ப நாவலுக்கு இருக்குற மிகப் பெரிய சாபம், சினிமால இருக்கற மாதிரி தரச் சான்றிதழ் இல்லாதது தான்.
அதனால அந்த வகையில மோசமா வெளியில வர கதைங்க எல்லாம் சுலபமா, குடும்ப நாவல் முக்காடு போட்டுட்டு நல்லா கல்லா கட்டிக்குறாங்க. இதுவே அப்படி ஒரு சர்ட்டிபிக்கேஷனோட நாவலுங்க வெளியில வருதுன்னு வை, தன்னோட புத்தகத்துக்கு மேலே “A” முத்திரை குத்தி கதையை வெளியில விடறதுக்கு ரொம்பவே தயங்குவாங்க. அதோட சமூகத்துல அவங்க மேலே ஒரு மோசமான அடையாளமும் விழுந்துடும் இல்ல... அதுக்கு பயந்தவங்களும் அதுல இருக்கத்தானே செய்வாங்க. பாரு.. எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ போயாச்சு!”
“கண்டிப்பாம்மா... எதுக்கு இப்படி மைக் பிடிச்சு பேசாத குறையா, இவ்வளவு தம் கட்டி நீங்க பேசறீங்களோ எனக்கு கொஞ்சமும் புரியவே இல்லை!” என்று தளர்வாக சாய்ந்து அமர்ந்தான் மாறன்.
“ம்... இப்படி பேச வேண்டியவளுக்கு பதிலா தான், நான் அவள் இடத்துல இருந்து பேசிட்டு இருக்கேன்!”
“ஹான்... என்ன? ப்ச்... மறுபடியும் உளற ஆரம்பிக்காதீங்க, சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லி முடிங்க!” என்றான் அவன் சலிப்பாக.
“சரி சரி.. அந்த ஜீவிகா பொண்ணை பத்தி பேச வந்து தான், இவ்வளவு தூரம் வேற விஷயங்களை பேசியாச்சு!”
“ஓகே, சொல்லுங்க. அந்தப் பொண்ணு ரொம்ப நல்லா கதை எழுதுவாளா?”
“நல்லா கதை எழுதுவாளாவா..? சரியா போச்சு போ, அவ்வளவு அருமையா எழுதுவா!”
“ம்...” என இழுத்து தன் தாடையை வருடியவாறு, “பில்டப் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே!” என்றான் கேலியாக.
“போடா... திரும்பவும் ஏதாவது கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடாத. இதுவரை அவள் எழுதின கதைகளோட பிளாட்டை சொல்றேன் கேளு, நீயே ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிடுவ!”
ஆர்வமாக கூறும் தாயை புன்சிரிப்புடன் பார்த்தவன், “ம்ஹும்... பார்க்கலாம்!” என்று நக்கலாக சிரித்தான்.
“டேய்...” என மீண்டும் கடுப்பானவர், அவன் தோளிலே ஒன்று ஓங்கி வைத்தார்.
அந்நேரம், “அத்தை...” என திரும்பவும் பெண் தயக்கத்துடன் அழைத்தாள்.
“மறுபடியும் என்னம்மா?” என்று கோதையும் அலுப்புடன் கேட்டார்.
“இல்ல... நீங்க ஆன்லைன் கதைங்க எல்லாம் ரொம்ப படிப்பீங்களா?” என்றாள் மெல்லமாக.
“படிப்பாளாவா..? அவள் தினமும் ஒரு தடவையாவது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காம தூங்க மாட்டா!”
செழியன் வேகமாக கூற, அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு, “ஆமா... படிப்பேன்!” என மருமகளிடம் அழுத்தமாக மொழிந்தார் அப்பெண்மணி.
“உங்க பேரை நான் அங்கே பார்த்தது இல்லையே...”
“ஏய்... இரு இரு, அப்போ நீயும் அம்மாவோட கேஸ் தானா.. நிறைய கதைங்க படிப்பியா?”
திகைப்புடன் கேட்கும் கணவனிடம் திரும்பியவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாற, “இருடா... முதல்ல நாங்க பேசி முடிச்சிடறோம்!” என்று மகனை தடுத்தார் பெற்றவர்.
“பேஸ்புக்ல, சைட்ல எல்லாம் என்னோட ப்ரொபைல் நேம்.. பூங்கோதை இல்ல, கோதை நாச்சியார்!”
அவர் கேலிச் சிரிப்புடன் மொழிய, “ஓ...” என இழுத்தவளின் இதழ்களும் லேசான வெட்கப் புன்னகையில் நெளிந்தது.
