“இப்போ இருக்குற மாதிரி பெரிய பெரிய மெஷின் எல்லாம் இல்லாத அந்த காலத்துல அவ்வளவு எடையுள்ள விமானத்தை கோவில் மேல எப்படி ஏத்துனாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் உலகமே வியந்து பார்த்துட்டு இருக்கு…” அன்பரசன் தன் பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொண்டு தான் வியந்தவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டிருக்க, அங்கு அமர்ந்திருந்த மூவரில் ஒருவன் மட்டும் காதை தேய்த்துக்கொண்டு எப்போதுடா எழுந்து ஓடலாம் என்ற பாவனையில் அமர்ந்திருந்தான்.
தன் பெயரை இதுவரை எவர் முன்னும் பெருமையாய் உச்சரித்திருப்பானோ இல்லையோ வசைபாடாத நாளில்லை. ஆனால் இன்றோ அவள் பெயருடன் இணைந்திருக்கும் தன் பெயரை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பார்த்து குதூகலித்துக் கொண்டான்.
“என் பேருக்கே இப்போதான் பெருமை வந்திருக்கு.” அருகில் கைகூப்பி நின்றிருந்த மனைவியின் செவியில் எத்தனையாவது முறை சிலாகித்துக் கூறினானோ… ஒவ்வொரு முறையும் மனைவி சலிப்பாய் பார்த்து வைத்தாள்.
இதயம் இயல்புக்கு மீறி அடித்துக்கொண்டாலும் ஒரு முடிவுடன் இருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “என்னோட காத்திருப்புக்கான முடிவு சுகமானதா சோகமானதான்னு எனக்கு இன்னைக்கே தெரிஞ்சாகனும் வானதி?” என்று கேட்டுவிட, சிலிர்ப்பு ஓடி அடங்கியது எதிர்புறம்.