Kadhaluku Naan Puthithu - Deepa Babu
காதலுக்கு நான் புதிது
கதைக்கரு
உறவுகளின் கட்டாயத்தின் பேரில் மனம் முழுவதும் வெறுப்பு சூழ்ந்திருக்க, விருப்பமில்லா திருமணத்திற்கு மணமேடை ஏறுகிறாள் அவள். தன்னை வெறுப்பவளின் உணர்வுகளுக்கு சற்றும் மதிப்பளிக்காது, தன் உடமையென அவளை துச்சமாக நினைத்து திருநாண் பூட்டுகிறான் அவன்.
Matru Kuraiyatha Mannavan 5 - Deepa Babu
*5*
இரவு உணவு உண்ணும் வேளையில் வீட்டிற்கு வெளியே பைக்கை உதைத்துக் கிளப்புகின்ற ஓசைக் கேட்கவும் அது பரத்தாக இருக்குமோ, கம்பெனிக்கு கிளம்புகிறானா என்ன என்று தன் வாயில் இருந்த உணவோடு எண்ணத்திலும் அசைப்போட்டாள் ரித்திகா.
Matru Kuraiyatha Mannavan 4 - Deepa Babu
*4*
தாத்தாவின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த பரத், இவள் சமைத்ததையா நாம் உண்கிறோம் என்று திகைத்துப் போய் பார்க்க, ரித்திகாவோ தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
Matru Kuraiyatha Mannavan 3 - Deepa Babu
*3*
தன்னை எரித்து விடுவதை போல் பார்த்துவிட்டு விலகிச் சென்றவன் தனது இருசக்கர வாகனத்தை அந்த இடமே பலமாக அதிரும்படி உதைத்து வேகமாக முறுக்கிவிட்டு கிளப்பிச் சென்றதிலேயே அவனுடைய கோபத்தின் அளவு உறைக்க அதிர்ந்துப் போய் நின்றிருந்தாள் ரித்திகா.
Matru Kuraiyatha Mannavan 2 - Deepa Babu
*2*
லேசாக வாயைப் பிளந்து கைமறைவில் கொட்டாவி ஒன்றை விட்டவாறே அறையை விட்டு வெளியே வந்த ரித்திகா, மூக்கு கண்ணாடி என்கின்ற பெயருக்கு ஏற்ப தாத்தா அணிந்திருந்த கண்ணாடி அவர் மூக்கின் சரிவில் முழுவதும் சரியாமல் இடையில் தடையிட்டு தேங்கி நிற்பதை சிரிப்புடன் பார்த்தவாறே அருகில் வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கையில் ஏதோ ஒரு தடிமனான தமிழ் புத்தகத்தை வைத்து கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தவரின் தோளில் வசதியாக தலையை சாய்த்துக் கொண்டாள்.
Matru Kuraiyatha Mannavan 1 - Deepa Babu
*1*
"துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்;
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்,
Oru Vithai Uyir Kondathu - Deepa Babu
ஒரு விதை உயிர் கொண்டது
இன்று உள்ள கல்வி கொள்கைகளால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் குறித்து சிறு அளவில் அலசி என் அறிவுக்கு எட்டிய ஒரு தீர்வையும் சொல்லி இருக்கிறேன். கதையின் கரு பின் பகுதியில் தான் வரும். அதற்குமுன் நம் நாவல் பிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க நாயகன், நாயகியின் மோதலையும், காதலையும் சுமந்துச் செல்லும் கதை.
*******
கதையிலிருந்து சிறு துளிகள்
இதழ்களில் பரவிய புன்சிரிப்புடன், “மாமா உன்னை காதலிக்கிறாரா மதி?” என ஆர்வத்துடன் கேட்டான் முகேஷ்.
தனக்குள் நடக்கும் களேபரத்தில் அவனை நிமிர்ந்தும் பாராமல் தன் நினைவுகளில் உழன்றபடி நடைப்பயின்றுக் கொண்டிருந்தவள் அளித்தப் பதிலில் இவன் அதிர்ச்சியாகி வாயைப் பிளந்து நின்றான்.
“ஐயோ... காதல் எல்லாம் இல்லை...” என அவள் மறுக்க ஆரம்பிக்கவும், ‘அது இல்லையென்றால் வேறு என்ன?’ என்று அவன் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்பு அவளே பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்.
“என் கழுத்தில் தாலி தான் கட்டி விட்டார்!” என்று பரிதாபமாக முகத்தை வைத்தபடி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
‘காதலிக்கவில்லை... கல்யாணமே செய்துக் கொண்டாரா?’
தன் சொல்லில் அசையாமல் சிலையாக சமைந்து விட்டவனை எரிச்சலுடன் நோக்கிவிட்டு அருகில் சென்று அவனை பிடித்துப் பலமாக உலுக்கி எடுத்தாள் நிறைமதி.
“அண்ணா... உன்னிடம் தானே பேசிக் கொண்டிருக்கிறேன், என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்!”
ஆங்... என திடுக்கிட்டு விழித்தவன், ம்... ம்... என்றபடி, “அப்பொழுது உனக்கு திருமணம் முடிந்துவிட்டதா?” என்றான் இன்னமும் நம்ப முடியாமல்.
“கடவுளே... தாலி தான் கட்டினார் என்றேன், திருமணம் எல்லாம் இல்லை!” என அசட்டையாக கூறியவளை கொலை வெறியோடு நோக்கினான் முகேஷ்.
“உனக்கு மனதில் பெரிய சின்னத்தம்பி பிரபு என்று நினைப்பா...” என விழிகளை உருட்டினான்.
ஹான்... என விழித்துவிட்டு, “என்ன உளறுகிறாய் நீ?” என்று பெண்ணும் திரும்பி முறைத்தாள்.
“அப்புறம்... கழுத்தில் தாலி கட்டுவதற்கு பெயர் திருமணம் இல்லாமல் வேறு என்னவாம்?” என்று அவனும் பதிலுக்கு எகிறினான்.
“அதைத்தான் நான் உடனே கழற்றி வீசி விட்டேனே...” என மதி வேகமாக மொழியவும், “அடிப்பாவி... என்னடி சொல்கிறாய்? தாலியை கழற்றி வீசி விட்டாயா!” என்று நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தான் முகேஷ்.
‘ஐயோ... என்ன இது? ஆதரவு எதிர்பார்த்து நம்பி விஷயத்தை சொன்ன இவனே இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கிறான். அப்பொழுது வீட்டில் உள்ள மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?’ என்று அச்சத்தில் மிரண்டுப் போனாள் நம் மனுவின் தர்மபத்தினி.
“கடவுளே... என்னடா நீ இப்படி செய்து வைத்திருக்கிறாய்?” என்று தன் சிகையை அழுந்தக் கோதியபடி தலைகுனிந்திருந்த தங்கையுடன் சேர்ந்து தானும் தவிக்க ஆரம்பித்தான் முகேஷ்.
கீழுதட்டை அழுந்தக் கடித்தபடி மற்றவரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் நாம் என்கின்ற பயத்தில் கைவிரல்களை பிசைந்துக்கொண்டு முகம் முழுவதும் கலவரத்தை சுமந்தபடி பரிதாபமாக நின்றிருந்தவளை காணும்பொழுது நெஞ்சம் உருகித்தான் போனது தமையனுக்கு.
“எப்படி பாப்பா இது நடந்தது? உனக்கும், மாமாவிற்கும் தான் சுத்தமாக எதுவும் ஒத்துப் போகாதே... நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே மாட்டீர்கள். பிறகு எப்படி அவர் உன் கழுத்தில் தாலி கட்டினார்?” என்று விவரம் கேட்டான்.
***
சுகமான உறக்கத்தை விட்டு வெளிவர மனமில்லாதவளோ மகளை மீண்டும் இழுத்துப் பிடித்து அருகில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தாள்.“ம்மா...” என முரண்டுப் பிடித்து அவள் அணைப்பில் இருந்து திமிறி வெளியே வந்தப் பிள்ளை அவளின் கன்னம் தொட்டு எழுப்ப ஆரம்பித்தது.
“பேபி... அம்மாவிற்கு ரொம்ப டயர்டாக இருக்கிறதுடா தங்கம். நான் தூங்க வேண்டும், நீ அப்பாவை எழுப்பு!” என்று விழிகளை திறவாமலே முனகினாள் நிறைமதி.
முகத்தை சுருக்கிய குழந்தை அம்மாவின் மீதேறி உருண்டுப் பிரண்டு முகம் சுளித்த அவளின், “ஏய்...” என்கிற அதட்டலை அலட்சியம் செய்து அப்பாவின் அருகில் சென்று விழுந்தாள்.
தன்னருகில் எதுவோ பொத்தென்று விழுந்ததில் திடுக்கிட்டு விழித்த மன்வந்த், தான் இமைகளை பிரித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்து ஈயென்று உதடு பிரித்து பச்சரிசிப் பற்களை காட்டிய மழலையை கண்டு முகம் கனிந்தான்.
விரிந்தப் புன்னகையுடன், “என் பப்புக்குட்டி... எழுந்து விட்டாயாடா தங்கம்!” என்றவாறு மகளை தூக்கி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான் அவன்.
அருகினில் திரும்பிப் பார்க்க மனைவி ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தாள். “அதென்ன உன் அம்மாவை விட்டுவிட்டு நீ என்னை வந்து எழுப்பி இருக்கிறாய்?” என்று கண்களை இடுக்கினான்.
நிலாவோ திருதிருவென்று விழித்துவிட்டு தந்தையை பார்த்து அசட்டுப் புன்னகை புரிந்தது. அதிலேயே தனக்கான விடையை கண்டுக்கொண்டவன் விஷமமாக சிரித்தான்.
“நாம் இரண்டு பேரும் எழுந்து விட்டோம் இல்லை... இவளுக்கு மட்டும் என்ன தூக்கம்?” என போலியாய் மனைவியின் புறம் ஒரு முறைப்பை செலுத்தியவன் மகளிடம் திரும்பி, “அம்மாவை எழுப்பலாமா?” என்று கேட்டு ஒற்றைக் கண்சிமிட்டினான்.
அதில் உற்சாகமானவள் தலையாட்டிக் கொண்டே மதியிடம் தவழ்ந்து செல்ல, இவன் மெதுவாக மனைவியின் முகத்தருகே குனிந்தான்.
அப்பாவின் செயலை கண்டு கிளுக்கிச் சிரித்த குழந்தை மீண்டும் அவனே தன் அம்மாவை நெருங்கவும் வேகமாக தடுத்து, “பாப்பா... பாப்பா...” என தன் நெஞ்சில் கைவைத்து காண்பித்துவிட்டு மதியை நெருங்கினாள்.
சின்ன முறுவலிப்புடன் மகளை பார்த்திருந்தவனின் முகம் அடுத்து அவள் செய்த செயலால் பேயறைந்தது போல் மாறியது.
“ஏய்... குட்டிம்மா!” என பாய்ந்து மகளை தூக்கிக் கொண்டவன், ‘ஐயோ... இவள் முன்னால் இனி கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும்!’ என்று பதற்றத்துடன் மனதில் குறித்துக் கொண்டான்.
Oru Vithai Uyir Kondathu - Part 2 (Kindle Link)
Azhage Azhage Yethuvum Azhage - Deepa Babu
அழகே அழகே எதுவும் அழகே
எந்தவொரு தீவிரமான சிந்திக்க கூடிய பகுதி இல்லாமல் முற்றிலும் மகிழ்ச்சியுடன் படித்து ரசிக்க கூடிய வகையில் எழுதிய கதை இது. இரு வேறு ஜோடிகளின் திருமண ஏற்பாடுகளும், அதைத் தொடர்ந்த கலாட்டாக்களுமாக கலகலப்புடன் நகரும் கதை. வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் அவர்கள் இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.
Azhage Azhage Yethuvum Azhage - Kindle Link
Unakagave Naan Vaazhgiren - Deepa Babu
உனக்காகவே நான் வாழ்கிறேன்
கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.
Unakagave Naan Vazhgiren - Kindle Link
Kanne Kalaimaane 5 - Deepa Babu
*5*
சுவாதினமாக தனக்கு ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்த இளங்கதிர் கவரிலிருந்த அலுமினியம் ஃபாயில் டப்பாக்களை எடுத்து வெளியில் வைத்துவிட்டு, "நான் கீழே வந்ததிலிருந்தே அவள் என் கண்களில் தென்படவில்லை!" என்று அலட்சியமாக கூறியபடி பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் சேர்த்து அவர்களிடம் ஆளுக்கொன்றாக நகர்த்தி வைத்தான்.
Kanne Kalaimaane 4 - Deepa Babu
*4*
தன் மகளின் இழப்பை கேட்டு இளநகையின் விழிகளில் தென்பட்ட கவலையும், பதற்றமும் அமுதாவை நிலைத்தடுமாறச் செய்தது.
Kanne Kalaimaane 2 - Deepa Babu
*2*
இளநகை சிறு வயது முதலே மற்றவரின் அதட்டலிலும் வெறுப்பான பார்வையிலுமே வளர்ந்து தன்னை பண்படுத்திக் கொண்டவள்.
Kanne Kalaimaane 1 - Deepa Babu
*1*
தோட்டத்தில் இருந்த பெரிய மாமரத்தில் இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தியபடி தாவி குதித்து ஓடிக்கொண்டிருக்க, ஆர்வமாக அதை படம் பிடித்துக் கொண்டிருந்தது அந்த அழகிய கயல்விழிகள்.
Kanne Kalaimaane - Deepa Babu
கண்ணே கலைமானே
பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்துப் பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்? தன் பிள்ளை மனதால் படிப்பவரின் மனதை கொள்ளை கொண்டு விடும் நாயகியால் நாயகனின் மனதை கவர்ந்திழுப்பதா கடினம்?
Yennai Theriyuma 5 - Deepababu
*5*
"சரி அம்மா... நீங்கள் அனுமதித்தால் நான் உங்கள் தங்கை பெண் மணியை இவர்கள் வண்டியை விட்டு விட்டு வந்தார்களே அங்கே அழைத்து சென்று அந்த பசங்களை பார்த்து என்ன ஏதுவென்று விசாரித்து எச்சரித்து வருகிறேன்!" என்று லட்சுமியிடம் அனுமதி கேட்டான் ஜெய்சங்கர்.
Yennai Theriyuma 4 - Deepababu
*4*
அடுத்தடுத்து ஜெய்யிடம் அனுமதி வாங்காமல் வேகமாக அவன் வண்டியில் ஏறி அமர்ந்தது மட்டுமில்லாமல் அவனை விரட்ட ஆரம்பித்தாள் அவள்.
Yennai Theriyuma 3 - Deepababu
*3*
ஜெய்சங்கர் திரும்பிப் பார்த்தால் அங்கே ஒருவரும் இல்லை. சுற்றிலும் விழிகளை சுழற்றியவன் செண்பகத்தின் தொடர்ந்த ஹலோ... ஹலோ... என்ற பொறுமையற்ற கூக்குரலால் மீண்டும் திரும்பி மொபைலை காதுக்கு கொடுத்தான்.
Yennai Theriyuma 2 - Deepababu
*2*
பைக்கில் தன் அலுவலகம் விரைந்தவன், வழியில் எதிர்பட்ட அனைவரிடமும் புல்லட் ட்ரைன் வேகத்திற்கு ஒரு ஹாயுடன் தன் கேபினிற்குச் சென்றான்.
Subscribe to:
Comments (Atom)
Most Popular
-
தீயுமில்லை புகையுமில்லை
-
காதலுக்கு நான் புதிது கதைக்கரு உறவுகளின் கட்டாயத்தின் பேரில் மனம் முழுவதும் வெறுப்பு சூழ்ந்திருக்க, விருப்பமில்லா திருமணத்திற்கு மணமேடை ஏற...
-
கதைக்கரு தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகிய...

