*54*
அனைத்து செல்களிலும் மனுவே நிரம்பியிருக்க கை முஷ்டிகளை இறுக்கியவன், 'நோ... இதற்குமேல் எதையும் எண்ணி குழம்பக் கூடாது, என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக்கு அவள் வேண்டும். மனுவை யாருக்கும் நான் விட்டுத்தர மாட்டேன், அவள் எனக்கு சொந்தமானவள்!' என்கிற வெறி அவனுக்குள்ளே பூதாகரமாக கிளம்பத் துவங்கியது.