"ஆக்ட்சுவலி... இந்த விஷயத்தில் எனக்கும் ஆரம்பத்தில் உள்ளுக்குள் சிறு நெருடல் தோன்றியது தான். பல வழிகளில் யோசித்து, இறுதியில் அதற்கு பெர்ஃபெக்டான லாஜிக்கான ஒரு ரீசனும் கண்டுபிடித்து விட்டேன்!" என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டினாள் மனு.
அவளின் வார்த்தைகளை கேட்டு ஒருகணம் அசைவற்று சிலையென ஸ்தம்பித்து நின்று விட்டவன் பிறகு தழுதழுத்த குரலில், "மனும்மா..." என்றபடி அவள் தலையை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டான்.
இவள் தன் புத்தியில் இல்லாமல் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறாள் என்கிற முடிவுக்கு வந்தவன், "உளறுவதை நிறுத்திவிட்டு முதலில் இங்கிருந்து கிளம்பு!" என்றான் அமைதியாக.