Unai Kaivida Matten - Deepa Babu

 


உனை கைவிட மாட்டேன்

(இணையத்தில் வராத நேரடிப் புத்தகம்)

கதைக்கரு


என் பாணியில் ஒரு இலகுவான காதல் கதை. அவரவருக்கு என்று இவ்வுலகில் தனி ஒரு நியாயம் இருக்கிறது அல்லவா? அதைத்தான் தன்னவளின் தவறென்று பெரிதாக ஒன்றுமில்லை, அவளுடைய சூழ்நிலை மட்டும் தான் அவளை திமிர் கொண்டவளாக, மோசமானவளாக சித்தரிக்க காரணம் என்று அவளுக்காக குரல் கொடுக்கிறான் ஆடவன்.

“உனை காப்பேன் உயிராக” நாவலின் சஞ்சய் கதாப்பாத்திரம், இங்கே நாயகனாக களம் இறங்குகிறான். அவனுடன் இணைந்து உங்களுடன் பயணிக்க, அக்கதை மாந்தர்கள் மீண்டும் வருகிறார்கள்.

Unai Kaivida Matten - Amazon Kindle Link


**********

கதையிலிருந்து சிறு துளிகள்


போர்டிக்கோவில் வாகனத்தை நிறுத்தியவன் பெண்ணை கீழே இறக்காமல், தன்னிடம் இருந்த சாவியால் முதலில் வீட்டின் கதவை திறந்து, நேராக சென்று பிரணவிகாவின் அறைமுன் நின்றான்.

‘வேற வழியே இல்ல... இவகிட்ட தான் நாம ஹெல்ப் கேட்டாகனும். அவளை என் ரூம்ல தங்க வைக்கறது எல்லாம் சரிவராது!’ என்று யோசித்தவன், ‘நட்டநடு இராத்திரில கன்சீவா இருக்கவளை டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கே...’ என சற்று சங்கடமாக உணர்ந்தாலும், மனதை தேற்றிக் கொண்டு கதவை தட்டினான்.

தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் தட்டியும் பெண் கதவை திறக்கும் வழி தெரியாததால், “கும்பகர்ணி... அவளுக்கு மேல இவ இருப்பா...” என்று புலம்பியவாறு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.

“ஹலோ... சொல்லு அத்தான்!” என முனகியபடி, லேசாக கொட்டாவி விட்டாள்.

“பார்த்து நிதானமா எழுந்து வந்து கதவை திற!”

“லூசு... சாவி எடுத்துட்டுப் போகலையா நீ? நேரங்கெட்ட நேரத்துல வருவேனு தெரியும் இல்ல... அப்புறம் எதுக்கு எடுக்காம போன..?”

“என்கிட்ட சண்டை போடறதுன்னா மட்டும் நல்லா தூக்கம் தெளிஞ்சிடுமே உனக்கு... வீட்டுக்கு உள்ள வந்துட்டேன், உன் ரூம் கதவை திறடி!” என்றான் கடுப்புடன்.

“என்ன? சரி இரு, வரேன்!” என்று இணைப்பை துண்டித்தாள்.

அடுத்த சில நொடிகளில் கதவை திறந்தவள், “இந்த நேரத்துக்கு தூங்கப் போகாம, என்னை ஏன் வந்து எழுப்பிட்டு இருக்க?” என்று முறைத்தாள்.

“ப்ச்...” என அலுத்தவன், “ஒரு சின்ன பிரச்சனை... நீதான் பார்த்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்!” என்றான் மெதுவாக.

“ஹ்ஹ... பாருடா, என்கிட்ட இவ்வளவு பவ்யமா பேசுவியா நீ...” என நக்கலாக சிரித்தாள்.

“அம்மு... விளையாடாத. நானே அங்கே, இங்கேன்னு அலைஞ்சு திரிஞ்சு ரொம்ப டயர்டா வந்து இருக்கேன்!”

“என்ன ஆச்சு அத்தான்? மப்பு எதுவும் அதிகமாகி எங்கேயாவது ஆக்ஸிடன்ட் செஞ்சுட்டியா... யாராவது துரத்திட்டு வராங்களா?” என்று கலவரம் ஆனாள்.

“வாயை கழுவுடி... பேச்சை பாரு. நான் எல்லாம் தெளிவா தான் இருக்கேன், என் கூட வந்து இருக்க ஒருத்தி தான் ஓவர் மப்புல மட்டையாகி கிடக்கா...”

“என்னது?” என்று விழிகளை விரித்தவள், “உனக்கு கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா... அதுவும் கூட சேர்ந்து குடிக்கற அளவுக்கு...” என இதழ்களை பிளந்தாள்.

“இல்ல... இது வேற பிரச்சனை. என்னை நிக்க வச்சிட்டே, வரிசையா கேள்வியா கேட்டு கொல்லாத. அவளை தூக்கிட்டு வந்து உன் ரூம்ல படுக்க வைக்கறேன், நீ என் ரூம்ல படுத்துக்கோ. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத பொண்ணை என் ரூம்ல தங்க வைக்கறது சரிவராது!” என்று பேசியபடியே மளமளவென்று கீழே இறங்கிச் சென்றான்.

‘இந்த அத்தான் என்ன சொல்றான், செய்றான்...?’ என குழம்பியபடி, அவன் சென்ற திசையை பார்த்து இருந்தாள் அவள்.

அடுத்து அவன் கைகளில் அள்ளி வந்த பெண்ணை பார்த்து, ‘யப்பா... என்ன... கலரா இருக்காடா இவ...!’ என்று வெகுவாக வியந்து நின்றாள் பிரணவி.

**********

“ஹாய்!”

தன் பின்னே கேட்ட குரலில் புருவம் சுருங்க திரும்பியவள் அவனை கண்டு வியந்து, “ஹாய்!” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

சஞ்சய் மௌனமாக முறுவலிக்க, “என்ன... இந்தப் பக்கம்?” என்று கண்களை இடுக்கினாள்.

“உன்னை பார்க்கனும் போல இருந்துச்சு, வந்துட்டேன்!”

முகம் மாற, “வாட் டூ யூ மீன்?” என கடினமாக கேட்டாள்.

அவனோ உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்க, பெண்ணின் முகத்தில் சலிப்பு தோன்றியது.

சோர்வாக கையில் இருந்த கூடையை அழுந்தப் பற்றியவள், “காபி சாப்பிட போலாமா?” என்றாள் அடுத்து வேகமாக நிமிர்ந்து.

“ம்... வொய் நாட்? லெட்ஸ் மூவ்!” என்று இயல்பாக முன்னால் நடந்தான்.

அவன் முகத்தில் தேவைக்கு அதிகமாக எந்த உற்சாகமும், ஆர்ப்பரிப்பும் தெரியாததை அவதானித்தபடி மெல்ல உடன் நடந்தாள் சஞ்சனா.

“சம்திங்... ஏதாவது சாட் ஆர்டர் பண்ணலாமா?”

“நோ... ஒன்லி காபி!” என்றாள் அழுத்தமாக.

“ஓகே...” என்றுவிட்டு அவள் கேட்டதை கொண்டு வர பணித்தவன், எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணின் முகத்தை பார்த்தான்.

“ஸோ... என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?”

அவளின் கேள்விக்கு அவன் தன்னுடைய தொழிலை கூற, கண்களில் கேலிச் சிரிப்புடன் அவனை பார்த்து இருந்தாள் அவள்.

“நான் அதைக் கேட்கலை...”

“வேற...” என மறுப்பாக தலை அசைத்தவன், “புரியலை!” என்றான்.

“ப்ச்...” என்கிற அலுப்புடன் உதட்டை சுழித்தவள், “நான் என்னை பார்க்க வந்ததை கேட்டேன்!” என்று தெளிவுப் படுத்தினாள்.

“ஹோ... எதுக்கும் இப்படி கொஞ்சம் தெளிவாவே பேசினா நல்லா இருக்கும், இதெல்லாம் எனக்கு சுத்தமா பழக்கம் இல்லை!”

“ஃபைன்... பழக்கம் இல்லாததை எதுக்கு செய்ய ட்ரை பண்றீங்க?”

“தெரியலையே... அப்பப்போ உன்னோட தாட்ஸ் வந்து என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. என்னோட கஸின் பிரணவி... அன்னிக்கு வீட்டுல பார்த்தியே, அவள் கூட சொன்னா... நீ ஏதோ வித்தியாசமா தெரியறேன்னு... எனக்குமே கூட கொஞ்சம் அது புரியுது. ஆனா என்னன்னு தான் தெளிவா தெரிஞ்சிக்க முடியலை!”

உண்மையில் அவனுடைய வார்த்தைகள், சஞ்சனாவை மண்டை காய வைத்தது.

அவள் நெற்றியை தாங்கிக் கொள்ளவும், “தலைவலிக்கு தான் காபி கேட்டியா?” என்று மெதுவாக கேட்டான் சஞ்சய்.

நிமிர்ந்து அவனை முறைத்தவள், “உங்களை பார்த்ததால தான் எனக்கு தலைவலியே வந்துச்சு!” என்று பல்லைக் கடித்தாள்.

“ஓ...” என உதட்டை குவித்தவன், “அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? வேணும்னா... இன்னொரு காபி எக்ஸ்ட்ராவா வாங்கி தரேன்!” என்றான் அசட்டையாக.

**********


“இன்னும் என்ன யோசனை?” என்றான்.

“இல்ல... என்ன வேண்டறதுன்னு தெரியலை...”

அவளை வியப்புடன் பார்த்து, “உன்னை தூக்கிட்டுப் போய் மியூஸியத்துல தான் வைக்கனும். மனுஷனா பிறந்து வாழ்ற எல்லாருக்குமே ஏதாவது தேவை இருந்துட்டே தான் இருக்கும். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமா வரிசையா வேண்டுதல் வச்சிட்டே இருப்பாங்க. நீ என்ன இப்படி சொல்ற?” என்று இதழ்களை பிதுக்கினான்.

“அது... நான் பெருசா சாமி கும்பிட மாட்டேன், அதனால எதுவும் வேணும்னு கேட்க தோணினது இல்ல...”

“ம்... ரொம்ப இல்லைன்னாலும் எனக்கு எல்லாம் எங்க வீட்டுல பழகிடுச்சு!” என்றவன், “இதுக்கு ஏன் இவ்வளவு திணறுற...? ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணை மூடி உட்கார்ந்து, உனக்கு ஏதாவது வேணும்னு தோணுதான்னு கொஞ்சம் டீப்பா யோசிச்சு பாரு. அப்புறம் அதையே ஒருமுகமா மெடிட்டேட் பண்ணு!” என்றான் இலகுவாக.

“அதெல்லாம் தேவையில்லை... இப்பவே ஒன்னு வேணும்னு தோணிட்டு தான் இருக்கு!”

“சூப்பர் போ... அப்புறம் என்ன? ப்ரொஸீட் பண்ணு!”

“இல்ல... அதுக்கு உன் பர்மிஷன் வேணும்!”

“என்ன...?” என்று நெற்றியை சுருக்கியவன், “நீ வேண்டுறதுக்கு நான் எதுக்கு பர்மிஷன் தரனும்?” என்றான் புரியாமல்.

“நான் வேண்டுறதே உன்னை பத்தி தானே...”

பெண் மெதுவாக கூற, சஞ்சய் அசையாது அவளையே பார்த்து இருந்தான்.

“வந்து... அப்படி வேண்டலாமா, கூடாதான்னு எனக்கு சரியா தெரியலை...” என்றாள் தடுமாற்றத்துடன்.

இன்னமுமே ஆடவன் இதழ் திறவாமல் இருக்க, “நா... நான் என்ன செய்யட்டும்?” என்று கண்கள் கலங்க அவன் முகம் பார்த்தாள்.

நாயகனின் இதயத்தினுள் ஏதேதோ கலவரம் நிகழ, அதைமீறி அவளின் கண்ணீர் சுமந்த விழிகள் மனதை பாதித்தது.

“பர்மிஷன் க்ரான்டட்... உனக்கு எப்படி தோணுதோ, அப்படியே ப்ரே பண்ணிக்கோ!” என்றான் அமைதியாக.

கன்னங்களில் நீர் உருண்டு இறங்க, “நிஜமாவா? அ... அப்படியே வேண்டிக்கட்டுமா...” என்றவளின் தொண்டைக்குழி சீரற்ற மூச்சால் மேலும் கீழும் தவிப்புடன் ஏறி இறங்கியது.

**********


இரண்டு நாட்கள் கழித்து தன் அருகில் இருந்தவனிடம், “சஞ்சு... அம்மா ஏதாவது கேட்டாங்களா?” என மெல்லமாக விசாரித்தாள் சஞ்சனா.

“ம்...” என்றபடி அவள் கையை எடுத்து, தன் விரல்களை கொண்டு அவளின் உள்ளங்கையில் மிருதுவாக கோடு இழுத்தவாறே, “இல்லையே...” என்று தோள்களை குலுக்கினான்.

“அச்சோ... என்ன பண்ற? எனக்கு கூசுது...” என்றவள் கையை உருவ முயல, தன் விரல்களோடு அவளுடையதை அழுந்த பிணைத்தபடி நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்தான் சஞ்சய்.

“எதுனாலும் ஃபேஸ் பண்ண ரெடி ஆகிக்கோ சஞ்சு... சும்மா அப்செட் ஆகக்கூடாது!”

அவனின் மொழியில் மெல்ல முகம் வாடியவள், “ம்...” என தலை அசைக்க,

“அதுக்குள்ள ஃப்யூஸ் போகற பார்த்தியா?” என்று கண்டனத்துடன் முறைத்தான்.

“ப்ச்...” என சோர்வாக பார்வையை திருப்பியவளை பக்கத்தில் இழுத்து, மென்மையாக அவளின் கன்னத்தில் அவன் உதடுகளை உரச, தேகம் சிலிர்த்து விழிகளை மூடிக்கொண்டாள் பெண்.

“டோன்ட் டெம்ப்ட் மீ சஞ்சு...”

மயக்கத்துடன் அவள் முனகிய நிமிடம், ஆடவனின் இதழ்கள் இரகசியச் சிரிப்பில் மலர்ந்து தன்னுடைய அதரங்களை நோக்கி மெதுவாக ஊர்ந்து வருவதை உணர்ந்து வேகமாக சுதாரித்தவள், அவசரமாக அவனை நெருக்கி அணைத்து கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.

“ஏய்... எதுக்கு இப்படி அரெஸ்ட் பண்ற?”

“நான் எங்கே அரெஸ்ட் பண்ணேன்? உன்னை ஆசையா கட்டிப்பிடிச்சு இருக்கேன், அவ்வளவு தான்!” என்றாள் கள்ளச்சிரிப்புடன்.

“வாலு...” என அவளின் இடையில் கிள்ளி துள்ளி விழ வைத்தவன், அவள் திரும்பவும் சுதாரிக்கும் முன் பட்டென்று குனிந்து இருவரின் இதழ்களையும் ஒன்றாக பூட்டிக் கொண்டான்.

அவன் பிடரி முடியை விரல்களில் இறுக்கி, “சஞ்சு...” என கிறங்கியவள், வேகத்தோடு தன் உதடுகளை பிரித்து, அவனுடைய தோளில் புதைந்து தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாள்.

“இப்படியே எதையும் யோசிக்காம என்னை மட்டும் நினைச்சிட்டு இரு, எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்!”

“உன்னால அவங்களை கன்வின்ஸ் பண்ண முடியும்னு நம்பிக்கை இருக்கா?”

நிமிர்ந்து சிறிது பயத்துடனே கேட்பவளின் நெற்றியில் முட்டியவன், “டூ ஹன்ட்ரட் பர்சென்ட் இருக்கு!” என்று அழுத்தமாக உரைத்தான்.

“ஹோ...” என தெளிந்தவள், அவனை மலர்ச்சியுடன் இறுக அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“ஓகே... கிளம்பலாமா?”

“ம்... இன்னும் கொஞ்சம் நேரம்!” என்று கெஞ்சி அவனை மேலும் இறுக்கிக் கொள்பவளின் முதுகை சிரிப்புடன் வருடிக் கொடுத்தான் சஞ்சய்.

“ஹான்... இப்போ போகலாம்!”

விலகி புன்னகையுடன் கூறுபவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளியவன், “குட் கேர்ள்!” என்றுவிட்டு காரை எடுத்தான்.

**********

திரும்பி வந்த சஞ்சயின் கரங்களில் பழச்சாறு கோப்பைகள் அடங்கிய தட்டு இருக்க, அனைவருக்கும் அதைக் கொடுத்தான். குறிப்பாக தாயின் மனதை எந்த விதத்திலும் கடுப்பாக்க கூடாது என்றே தெளிவாக அவர்கள் பக்கம் முதலில் சென்றவன், இறுதியாக தான் தன்னவளிடம் வந்து அருகில் அமர்ந்தான்.

“செம அத்தான்... அப்படியே பொண்ணு பார்க்கற அட்மாஸ்பியரை சூப்பரா கொண்டு வந்துட்ட. என்ன ஒன்னு...? உல்டாவா, சஞ்சனா உன்னை மாப்பிள்ளை பார்க்க வந்து இருக்கா!” என்று கேலி செய்து சிரித்தாள் பிரணவி.

தன் வீட்டினரை பற்றிச் சொல்லி சற்று தளர்ந்து போய் இருந்தவளை தேற்றவே, அந்த வேலையை செய்து இருந்தவன் சட்டென்று திகைத்தான்.

‘இவள் வேற தேவை இல்லாம எதையாவது உளறி இந்த அம்மாவை கிளப்பி விடறாளே...’ என்ற அவனின் பயத்திற்கு ஏற்றவாறு தான் சாரதாவும் அண்ணன் மகளை கடிந்து கொண்டார்.

“அம்மு... கண்டபடி உளறதை நிறுத்து நீ...”

“ஐயோ... இல்ல அத்தை, சும்மா விளையாட்டுக்கு...”

அவளை முடிக்க விடவில்லை, “இதுல என்ன விளையாட்டு...? என் பையன் ஒன்னும் அவ்வளவு ஈஸி கிடையாது!” என்று முறைத்தார்.

“ஆமாமா... உன் பையன் பெரிய மகாராஜாவே தான், அவன் கிரீடத்தை கீழே இறங்க விட்றாத...” என்று செல்லமாக நொடித்தாள் பிரணவி.

சாரதாவின் உஷ்ணமான பார்வையை தாண்டி, வந்து இருந்த பெண்ணின் இதழ்கள் லேசான புன்னகையில் விரிவதை ஆண்கள் இருவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதோடு அவளின் கண்கள் அத்தனை காதலை சுமந்து தங்கள் வீட்டுப் பிள்ளையை பார்ப்பதையும், கவனமாக கவனித்தனர்.

“அவங்க சொல்றது உண்மை தான் பிரணவி, உன் அத்தான் ஒன்னும் அவ்வளவு ஈஸி கிடையாது... என்னை மாதிரி இருக்கறவளுக்கு தான் சஞ்சுவோட ப்ரீஸியஸ் வேல்யூ தெரியும்!”

ஒருவித நெகிழ்ந்த நிலையில் ஆழ்ந்து அனுபவித்து சொல்லும் பெண்ணின் குரலில், அனைவரும் அவளை அமைதியாக ஏறிட்டனர்.

“இவளுக்கு போட்டியா சும்மா எதையாவது உளறாம அமைதியா இரு நீ!” என்று அவளை கண்டித்தான் சஞ்சய்.

“நோ சஞ்சு... ஐ க்னோ வெரி வெல், வாட் ஐ டிஸர்வ். என்னோட லக்கி சார்ம் நீ!”

கண்ணில் நீரோடு புன்னகைக்கும் பெண்ணை வருத்தத்துடன் பார்த்து, “உன்னோட வேல்யூ புரியாம, உன்னை நீயே டௌன் பண்ணிக்காதன்னு பல முறை சொல்லி இருக்கேன்!” என்று அவள் கரம்பற்றி அழுத்தினான்.

“எனக்கே தெரியாத என்னோட வேல்யூ எல்லாம் உன்னால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும்பா!”

பெண்ணின் சோர்ந்த முகத்தில் மின்னல் கீற்றாய் ஆனந்த வெளிச்சம் மின்னி மறைய, ஒரு பெருமூச்சுடன் அவள் கன்னத்தை தட்டி விட்டு தன் வீட்டு மனிதர்களிடம் திரும்பினான் அவன்.

“நான் ஏற்கனவே இவளை பத்தி உங்க கிட்ட சுருக்கமா சொல்லிட்டேன். இன்னும் என்ன தெரிஞ்சிக்கனும்னு நினைக்கறீங்க?” என்ற கேள்வியை பொதுவாக கேட்டாலும், தாயை குறிப்பாக பார்த்தான் சஞ்சய்.

“முதல்ல இருந்தே என்னை அப்செட் ஆக்குற ஒரே விஷயம்... இவளோட கேரக்டர் தான்!” என்றவர் மகன் எதையோ வேகமாக கூற வரும் முன்னே அவசரமாக அவனை தடுத்தார்.

“நான் இவகிட்ட தான் பேசனும் சஞ்சய்!” என்றார் சாரதா அழுத்தமாக.

“ம்மா...” என்று இயலாமையுடன் அவன் விளிக்க,

“நோ ப்ராப்ளம் சஞ்சு... என்கிட்ட பேசறதுக்கு தானே கூப்பிட்டு இருக்காங்க, அப்புறம் ஏன் அவங்களை ரெஸ்ட்ரிக்ட் பண்ற?” என்று அவனை அடக்கினாள் சஞ்சனா.

“ஓகே... அப்ஜெக்ஸன் ஒன்னும் இல்லை. ஆனா நீங்க ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப முக்கியம், உங்க மனசு வருத்தப்படற மாதிரியான பேச்சுக்களை எப்பவும் நான் விரும்ப மாட்டேன்!” என்று தன் எதிர்பார்ப்பையும் நாசூக்காக தெரிவித்தான் அவன்.

நேரடி புத்தகமாக தற்பொழுது விற்பனைக்கு தயாராகி விட்டது.



Most Popular